புதிய அழுத்தம் தரும் இம்ரான் கான் கட்சி

புதிய அழுத்தம் தரும் இம்ரான் கான் கட்சி

1 mins read
e1aabaf8-70eb-4b8f-a246-5fa1cfb024ea
-

லாகூர்: பாகிஸ்­தா­னின் முன்­னாள் பிர­த­மர் இம்­ரான் கான், தமது கட்சி ஆட்சி புரி­யும் இரண்டு மாநி­லங்­க­ளின் சட்­ட­ச­பைகளை அடுத்த வாரம் கலைக்­கும் என்று அறி­வித்­தி­ருக்­கி­றார்.

வரும் வெள்­ளிக்­கி­ழமை 23ஆம் தேதி பஞ்­சாப், கைபர்-பக்­துன்­குவா மாநி­லச் சட்­ட­ச­பை­கள் கலைக்­கப்­படும் என்று திரு இம்­ரான் சனிக்­கி­ழமை இரவு அறி­வித்­தார். அவ­ரது பாகிஸ்­தான் தெஹ­ரீக்-இ-இன்­சாஃப் கட்சி, பாகிஸ்­தா­னின் நான்கு மாநி­லங்­களில் இரண்டை ஆள்­கிறது.

பொதுத் தேர்­தலை விரை­வில் நடத்­தும்­படி மத்­திய அர­சாங்­கத்­துக்கு அழுத்­தம் கொடுக்க அந்த சட்­ட­ச­பை­கள் முன்­கூட்­டியே கலைக்­கப்­ப­டு­கின்­றன.

"சுதந்­தி­ர­மான, நியா­ய­மா­னப் பொதுத் தேர்­தலை நடத்­தா­விட்­டால் நாடு மூழ்­கும்," என்று திரு இம்­ரான் எச்­ச­ரித்­தார்.