ஒரே பாலினத் திருமணம்: சட்டமாக்க கோரிக்கை

1 mins read
5e48edf3-e3d7-4c34-96a8-9331806360d1
-

புது­டெல்லி: இந்­தி­யா­வில் ஒரே பாலினத் திரு­ம­ணங்­களை அங்­கீ­கரிக்­கு­மாறு நான்கு ஓரி­னச்­சேர்க்கை தம்­ப­தி­யர் உச்ச நீதி­மன்­றத்­தில் மனு அளித்துள்ளனர்.

ஒரே பாலின ஈர்ப்­பா­ளர்­கள் திரு­ம­ணம் செய்து கொள்­வ­தற்கு சட்ட அங்­கீ­கா­ரம் வழங்­கப்­பட வேண்­டும் என்­பதை வலி­யு­றுத்தி வழக்­க­றி­ஞர் நுபுர் குமார் மூல­மாக மனுத்தாக்­கல் செய்­யப்­பட்­டுள்­ளது.

அதில், "இருவேறு பாலி­னத்­த­வர்­கள் திரு­ம­ணம் செய்துகொள்­வதற்கு உள்ள அனைத்து உரி­மை­களும் ஒரே பாலி­னத்­த­வர்­கள் திரு­ம­ணம் செய்வதற்­கும் உள்­ளது. ஒரே பாலி­னத்­த­வர்­கள் தங்­க­ளுக்­குள் திரு­ம­ணம் செய்து கொள்­வதை ஏற்க மறுப்­பது அடிப்­படை சுதந்­தி­ரத்­திற்கு எதி­ரா­னது" என கூறப்பட்­டுள்­ளது.

இதே­போல், வேறு சிலர் டெல்லி, கேரள உயர் நீதி­மன்­றங்­களில் தாக்­கல் செய்­தி­ருந்த வழக்­கு­களும் உச்ச நீதி­மன்­றத்­திற்கு மாற்­றப்­பட்­டுள்­ளன. இம்மனுக்­களை விசா­ர­ணைக்கு ஏற்­றுக்­கொண்­டுள்ள உச்ச நீதி­மன்­றம், இதுகுறித்து பதிலளிக்­கும்­படி மத்­திய அர­சுக்கு நோட்­டீஸ் அனுப்பியுள்ளது.