எல்லையில் இந்திய வீரர்கள் குவிப்பு: மத்திய அரசு பகிரங்க அறிவிப்பு

எல்லையில் இந்திய வீரர்கள் குவிப்பு: மத்திய அரசு பகிரங்க அறிவிப்பு

2 mins read
8a0424ce-43a3-4a87-87d4-51340ae7d20c
-

மும்பை: இந்­திய, சீன எல்­லைப் பகு­தி­யில் இது­வரை இல்­லாத அள­வுக்கு இந்­திய வீரர்­கள் குவிக்­கப்­பட்­டுள்­ள­தாக மத்­திய வெளி­யு­றவு அமைச்­சர் ஜெய்­சங்­கர் வெளிப்­படை­யாகத் தெரி­வித்­துள்­ளார்.

இனி இந்­திய எல்­லையை யாரா­லும் மாற்ற முடி­யாது என்­றும் நிகழ்ச்சி ஒன்­றில் பேசும்­போது அவர் திட்­ட­வட்­ட­மா­கக் குறிப்­பிட்­டார்.

எல்­லைப் பகு­தி­யில் சீனா­வின் ராணு­வம் தொடர்ந்து அத்துமீறல்­களில் ஈடு­பட்டு வரு­கிறது. இத்­தகைய முயற்­சி­களை இந்­திய ராணு­வம் முறி­ய­டித்து வந்­தா­லும், எல்­லை­யில் பதற்­றம் நீடிக்­கிறது.

கடந்த 9ஆம் தேதி அரு­ணாச்­சலப் பிர­தேச மாநி­லத்­தின் தவாங் மாவட்­டம், யாங்சி எல்­லைப் பகுதி­யில் 600க்கும் மேற்­பட்ட சீன ராணுவ வீரர்­கள் அத்­து­மீ­றி­ய­தா­க­வும் இந்­திய எல்­லைக்­குள் நுழைய முற்­பட்ட அவர்­களை இந்­திய வீரர்­கள் துரத்­தி­ய­டித்­த­தா­க­வும் தக­வல்­கள் வெளி­யா­கின.

எல்­லைப் பதற்­றம் தொடர்பாக இந்­திய நாடா­ளு­மன்­றத்­தில் விவாதிக்க வேண்­டும் என எதிர்க்­கட்­சி­கள் வலி­யு­றுத்­தின. ஏற்­கெனவே இந்தியப் பகு­தி­களை ஆக்­கி­ர­மித்­துள்ள சீனா, தற்­போது இந்­தியா மீது போர் தொடுக்க தயா­ராகி வரு­வ­தாக காங்­கி­ரஸ் முன்­னாள் தலை­வர் ராகுல் காந்தி கூறி­னார். மேலும், மத்­திய அரசு உறங்­கிக் கொண்­டி­ருப்­ப­தாக அவர் குற்­றம்சாட்­டி­னார்.

இந்­நி­லை­யில் நேற்று முன்­தி­னம் டெல்­லி­யில் நடை­பெற்ற தனி­யார் ஊடக நிகழ்ச்­சி­யில் பேசிய வெளி­யுறவு அமைச்­சர் ஜெய்­சங்­கர், ராகுல் அபாண்­ட­மான குற்­றச்­சாட்­டு­க­ளைச் சுமத்­து­கி­றார் என்­றும் 2020ஆம் ஆண்­டுக்­குப் பிறகு எல்­லைப் பகு­தி­களில் இது­வரை இல்­லாத அள­வுக்கு இந்­திய வீரர்­கள் குவிக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும்் தெரி­வித்­தார்.

"இந்­திய எல்­லையை யாரா­லும் தன்­னிச்­சை­யாக மாற்ற முடி­யாது. குறிப்­பாக, சீனா­வால் எல்லைக் கோட்டை மாற்ற முடி­யாது. சீனாவின் அத்­து­மீ­றல்­க­ளுக்கு தக்க பதி­லடி கொடுக்­கப்­படும்," என்­றார் அமைச்­சர் ஜெய்­சங்­கர்.

மேலும், மக்­க­ள­வை­யில் நேற்று முன்­தி­னம் பேசும்­போது, அரு­ணாச்­சலப் பிர­தேச எல்லை விவ­கா­ரத்­தில் மத்­திய அரசை அர­சி­யல் ரீதி­யாக விமர்­சிப்­பதை தடுக்­க­வில்லை என்­றா­லும் இந்­திய வீரர்­கள் அடி­வாங்­கு­கி­றார்­கள் என்­பது போன்ற கருத்­து­கள் மிகுந்த வேதனை அளிப்­ப­தா­க­வும் குறிப்­பிட்­டார்.