டெல்லியில் குவிந்த நூறாயிரம் விவசாயிகள்

டெல்லியில் குவிந்த நூறாயிரம் விவசாயிகள்

1 mins read
34ff322d-1bcb-43f0-8857-c62d33c3854d
-

புது­டெல்லி: நான்கு அம்ச கோரிக்­கை­களை நிறை­வேற்ற வலி­யு­றுத்தி டெல்­லி­யில் விவ­சா­யி­கள் மீண்டும் போராட்­டத்தை தொடங்கி உள்ளனர். நேற்று முன்­தி­னம் நடை­பெற்ற இந்­தப் போராட்­டத்­தில் சுமார் நூறா­யி­ரத்­துக்­கும் அதி­க­மா­னோர் பங்­கேற்­ற­னர்.

குறைந்­த­பட்ச ஆதார விலையை செல­வி­னங்­க­ளின் அடிப்­ப­டை­யில் நிர்­ண­யிக்க வேண்­டும், அனைத்து வகை­யான விவ­சாய உற்­பத்­திப் பொருள்­க­ளுக்­கும் ஜிஎஸ்­டியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என விவ­சா­யி­கள் வலி­யு­றுத்தி உள்­ள­னர்.

டெல்லி ராம் லீலா திடலில் தொடங்கிய போராட்டத்தில் தெலுங்கானா, மத்தியப் பிரதேசம் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்றனர்.

"நாடு முழு­வ­தும் பல்­வேறு இடங்­களில் 18,000 தெரு­மு­னைக் கூட்டங்­களை நடத்­தி­னோம். 20 ஆயி­ரம் கிலோ ­மீட்­ட­ருக்கு நடைப்­ப­ய­ணம் மேற்­கொண்­டோம்.

"இது­போன்ற பல்­வேறு நிகழ்­வு­கள் கார­ண­மாக விவ­சா­யி­கள் மத்­தி­யில் விழிப்­பு­ணர்வு ஏற்­பட்­டுள்­ளது.

"அத­னால்­தான் டெல்லி போராட்டத்­தில் ஆயி­ரக்­க­ணக்­கானோர் பங்­கேற்­றுள்­ள­னர். போராட்டம் நீடிக்கும்," என விவ­சாய சங்­கப் பிர­தி­நி­தி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.