கர்நாடக காங்கிரஸ் தலைவர் வீட்டில் சோதனை

கர்நாடக காங்கிரஸ் தலைவர் வீட்டில் சோதனை

1 mins read
801a8b89-8670-4b52-9552-37dd636f8528
-

பெங்­க­ளூரு: கர்­நா­ட­கா­வில் மாநில காங்­கி­ரஸ் தலை­வர் டி.கே.சிவக்­கு­மா­ரு­டன் தொடர்­பு­டைய கல்வி நிறு­வ­னங்­களில் சிபிஐ நேற்று முன்­தி­னம் திடீர் சோதனை நட­வ­டிக்கை மேற்­கொண்­டது.

ஒரு கல்­லூ­ரி­யி­லும் பத்­தாம் வகுப்பு வரை உள்ள பள்­ளி­யி­லும் அதி­கா­ரி­கள் சோதனை நடத்­தி­னர்.

அப்­போது அக்­கல்­லூரி, பள்­ளிக்­குச் சொந்­த­மான இடங்­கள், கல்­விக் கட்­ட­ணம் தொடர்­பான ஆவ­ணங்­களை அவர்­கள் பார்­வை­யிட்­ட­னர். மேலும், நிர்­வா­கப் பிரி­வில் உள்ள மற்ற பணப் பரி­மாற்­றம் தொடர்­பான ஆவ­ணங்­கள் சில­வற்றை அதி­காரி­கள் பறி­மு­தல் செய்­ததாகக் கூறப்­படு­கிறது.

சில ஆண்­டு­க­ளுக்கு முன்பு டி.கே.சிவக்­கு­மா­ரின் வீடு, அலு­வ­ல­கங்­களில் வரு­மான வரித்­துறையினர் சோதனை மேற்­கொண்­ட­போது, சுமார் ரூ.8.5 கோடி மதிப்­புள்ள ரொக்­கப் பணம், ஆவ­ணங்­களை அதி­கா­ரி­கள் பறி­மு­தல் செய்­த­னர்.

இதை­ய­டுத்து வரு­மா­னத்­துக்கு அதி­க­மாக சொத்து சேர்த்­த­தாக சிவக்­கு­மார் மீது மத்­திய அம­லாக்­கத்­துறை வழக்­குப் பதிவு செய்­தது.

அதன் பின்­னர் இதே விவ­கா­ரம் தொடர்­பாக கடந்த இரண்டு ஆண்டு­க­ளுக்கு முன்­னர் சிபிஐயும் வழக்­குப்­ப­திவு செய்து, தன் பங்குக்கு விசா­ரணை நடத்தி வரு­கிறது.

மேலும், டி.கே.சிவக்­கு­மார் சட்­ட­வி­ரோத பணப் பரி­மாற்­றத்­தில் ஈடு­பட்­ட­தாகக் கூறி, சிபிஐ தரப்­பில் மேலும் ஒரு வழக்கு தொடுக்­கப்­பட்­டது. கர்­நா­ட­கா­வில் மிக விரை­வில் சட்­டப்­பே­ர­வைத் தேர்­தல் நடை­பெற உள்­ளது. இதை மன­திற்­கொண்டு டி.கே.சிவக்­கு­மா­ருக்கு நெருக்கடி தருவதாக காங்கிரஸ் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.