புதுடெல்லி: சமூக வலைத்தளமான 'யூடியூப்' மூலம் இந்தியப் பொருளியலுக்குக் கடந்த ஆண்டில் ரூ.10,000 கோடி மதிப்பிலான பங்களிப்பு கிடைத்துள்ளதாக 'ஆக்ஸ்ஃபர்ட் எக்கனாமிக்ஸ்' அமைப்பு தெரிவித்து உள்ளது. இந்தியப் பொருளியலில் 'யூடியூப்' வலைத்தளத்தின் தாக்கம் குறித்த அறிக்கையை அது வெளியிட்டது.
அதில், "இந்தியாவில் 4,500க்கும் மேற்பட்ட 'யூடியூப்' சேனல்கள் 10 லட்சத்துக்கும் அதிகமான சந்தாதாரா்களைக் கொண்டுள்ளன. கடந்த ஆண்டில் ரூ.1 லட்சத்துக்கும் அதிகமாக வருவாய் ஈட்டிய இந்திய 'யூடியூப்' ஒளிவழிகளின் எண்ணிக்கை 60% அதிகரித்துள்ளது.
"இந்தியாவின் 'யூடியூப்' மூலம் 750,000க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் கடந்த ஆண்டில் உருவாகியுள்ளன. இரண்டில் ஒரு பயனாளா் திறன் மேம்பாட்டுக்காக 'யூடியூப்'பை பயன்படுத்தியுள்ளனா். புதிதாக வேலைதேடுவோரில் 45 விழுக் காட்டினர் 'யூடியூப்' மூலமாகத் தங்கள் திறனை மேம்படுத்திக்கொண்டனா்.
"வழக்கமான கல்வி கற்பித்தல் முறைக்கு மாற்றாக 'யூடியூப்' தளம் உள்ளதாகக் கல்வியாளா்கள், மாணவா்கள் மற்றும் பெற்றோா் நம்புகின்றனா். 'யூடியூப்' மூலமாகக் குழந்தை
களுக்கு கற்பிப்பது சிறப்பாக உள்ளதென 83% பெற்றோா் கருத்து தெரிவித்துள்ளனா்," என்கிறது அறிக்கை.

