ரூ.50 கோடியில் உலகக் கிண்ண போதை

ரூ.50 கோடியில் உலகக் கிண்ண போதை

1 mins read
20d8799f-3e33-4d1e-9f66-5816ab9645ea
-

திரு­வ­னந்­த­பு­ரம்: உல­கக் கிண்ண காற்­பந்து இறு­திப் போட்டி கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை நடந்­தது. அன்று கேரள மாநி­லத்­தின் பல மாவட்­டங்­களில் காற்­பந்து ரசி­கர்­கள் விடிய, விடிய கொண்­டாட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர். அன்று மட்­டும் கேர­ளா­வில் ரூ.50 கோடிக்கு மது விற்­பனை நடந்­துள்­ள­தாக கேரள மது­பான விற்­பனை மைய (பெவ்கோ) தலைமை நிர்­வாக இயக்­கு­நர் யோகேஷ் குப்தா தெரி­வித்­துள்­ளார்.

"கேர­ளா­வில் வழக்­க­மாக ஞாயிற்­றுக்­கி­ழ­மை­களில் சுமார் 33 முதல் 34 கோடி ரூபாய் வரை மது விற்­பனை நடை­

பெ­றும். ஆனால் உலகக் கிண்ண இறு­திப் போட்டி நடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை மட்­டும் 50 கோடி ரூபாய்க்கு மது விற்­பனை நடந்­துள்­ளது. அன்று வழக்­கத்­தை­விட ரூ.15 கோடி அதி­க­மாக விற்­பனை நடந்­தது," என்று அவர் கூறி­னார்.