தெலுங்கானா முதல்வர் மகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

தெலுங்கானா முதல்வர் மகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

2 mins read
2fa8f082-16f1-479c-b834-07716cf269cd
-

கவிதா: இது பாஜகவின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை

ஹைத­ராபாத்: ஊழல், லஞ்ச வழக்கு தொடர்­பாக தெலுங்­கானா மாநில முதல்­வ­ரின் மகள் கவிதா மீது மத்­திய அம­லாக்­கத்­துறை குற்­றப்­பத்­தி­ரிகை தாக்­கல் செய்­துள்­ளது.

இது பழி­வாங்­கும் நட­வ­டிக்கை என முதல்­வர் சந்­தி­ர­சே­கர ராவ் தலை­மை­யி­லான தெலுங்­கான ராஷ்­டி­ரிய சமிதி கட்சி தெரி­வித்­துள்­ளது.

டெல்லி மது­பான ஊழல் வழக்­கில் ரூ.100 கோடி லஞ்­சம் தந்த 'சவுத் குருப்'பை கவிதாவுக்கு பங்கு இருந்ததாக அம­லாக்­கத்­து­றை­யின் குற்­றப்­பத்­தி­ரி­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இந்­தக் குற்றச்­சாட்டை கவிதா திட்­ட­வட்­ட­மாக மறுத்­துள்­ளார்.

கெஜ்­ரி­வால் தலை­மை­யி­லான டெல்லி அரசு சில மாதங்களுக்கு முன்­னர் புதிய மது­பான கொள்கையை அறி­வித்­தது. இதற்கு பாஜக உள்­ளிட்ட கட்­சி­கள் எதிர்ப்பு தெரி­வித்­தன. மேலும், மது­பான கொள்­கை­யின் மூலம் பல கோடி ரூபாய் ஊழல் நடந்­துள்­ள­தா­க­வும் குற்­றம்­சாட்­டு­கள் எழுந்­தன.

இதை­ய­டுத்து, சிபி­ஐ­யும் மத்­திய அம­லாக்­கத்­து­றை­யும் இந்த முறை­கேடு குறித்து வழக்­குப்­ ப­திவு செய்து விசா­ரணை மேற்­கொண்­டது. இது தொடர்­பாக தொழி­ல­தி­பர்­கள் சிலர் விசா­ரணை வளை­யத்­துக்­குள் கொண்டு வரப்­பட்டு, பின்­னர் கைது செய்­யப்­பட்­ட­னர்.

அவர்­களில் ஒரு தொழி­ல­தி­பர், 'சவுத் குருப்' என்ற பெய­ரில் சில முக்­கி­யப் பிர­மு­கர்­கள் குழு­வாக இணைந்து செயல்­பட்­ட­தா­க­வும் அந்­தக் குழு­வில் முதல்­வர் சந்­தி­ர­சே­கர ராவின் மகள் கவி­தா­வும் உள்­ளார் என்­றும் கூறி­ய­தா­கத் தெரி­கிறது.

மேலும், அந்­தக் குழு­வில் கவி­தா­வின் ஆதிக்­கம் அதி­க­மாக இருந்­தது என்­றும் டெல்லி அர­சுக்கு இந்­தக் குழு­வின் சார்­பில் நூறு கோடி ரூபாய் லஞ்­சம் வழங்­கப்­பட்­டது என்­றும் அத்­தொ­ழி­ல­தி­பர் தெரி­வித்­த­தாக ஊட­கச் செய்­தி­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இதை­ய­டுத்து கவி­தா­வி­டம் அம­லாக்­கத்­து­றை­யும் சிபி­ஐ­யும் விசா­ரணை மேற்­கொண்­டன. அதன் முடி­வில் அம­லாக்­கத்­துறை குற்­றப்­பத்­தி­ரி­கையை தாக்­கல் செய்­துள்­ளது.

அதில், 'சவுத் குருப்' என்ற குழு­வுக்கு கவிதா தான் தலைமை தாங்­கி­னார் என்­றும் பல்­வேறு வகை­யி­லும் அந்­தக் குழு­வில் ஆதிக்­கம் செலுத்தி, அதை கட்டுப்­ப­டுத்தி வந்­துள்­ளார் என்­றும் அமலாக்கத்துறை சாடி உள்­ளது.

ஆனால் கவிதா இதை மறுத்­துள்­ளார். தன் மீதான குற்­றச்­சாட்டு முற்­றி­லும் உண்­மைக்­குப் புறம்­பானது என அவர் டுவிட்­ட­ரில் குறிப்­பிட்­டுள்­ளார்.

"காலம் என் நேர்­மையை நிரூ­பிக்­கும். இது பாஜ­வின் அர­சி­யல் பழி­வாங்­கும் நட­வ­டிக்கை. பாஜ­க­வின் முகத்­தி­ரையை முதல்­வர் சந்­தி­ர­சே­கர ராவ் கிழித்­தெ­றி­வ­தால் பயம் கொண்டு அக்­கட்சி இவ்­வாறு மிரட்­டு­கிறது," என கவிதா தெரி­வித்­துள்­ளார்.

பாஜகவை எதிர்த்து முதல்வர் சந்திரசேகர ராவின் ஆதரவாளர்கள் மிக விரைவில் போராட்டம் நடத்த தயாராகி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.