சாலை குழிகளை மூடாவிட்டால் சம்பளத்தில் பிடித்தம்

சாலை குழிகளை மூடாவிட்டால் சம்பளத்தில் பிடித்தம்

1 mins read
3fa69527-ade9-439d-8e1c-a004564e33b4
-

பெங்­களூரு: சாலைக் குழி­களை மூட அர­சுப் பொறி­யி­ய­லா­ளர்கள் உரிய நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என்­றும் தவ­றும் பட்சத்­தில் குழி­களை மூட ஏற்­படும் செலவு பொறி­யி­ய­லா­ளர்­க­ளின் ஊதி­யத்­தில் இருந்து பிடித்­தம் செய்­யப்­படும் என்­றும் பெங்­க­ளூரு மாந­க­ராட்சி தலைமை ஆணை­யர் அறி­வித்­துள்­ளார்.

அண்­மைய மழைக்­குப் பின்­னர் பெங்­க­ளூ­ரில் சாலை பள்­ளங்­கள் அதி­க­ரித்­துள்­ளன. முக்­கி­ய­மான சாலை­கள்­கூட குண்டும் குழியுமாக மாறி­விட்­ட­தாகவும் தொடர் விபத்துகள் நிகழ்வதாகவும் பொது­மக்­கள் புகார்கள் எழுப்பி உள்­ள­னர்.

கடந்த ஐந்து ஆண்­டு­களில் மட்­டும் பெங்­க­ளூரு சாலை­க­ளைச் சீர­மைக்க ரூ.25,000 கோடி ஒதுக்­கப்­பட்­டும்­கூட பலன் இல்லை என ஊட­கங்­கள் சுட்­டிக்­காட்டி உள்­ளன.

இந்­நி­லை­யில், பெங்­க­ளூரு மாந­க­ராட்­சிக்கு கர்­நா­டக நீதி­மன்­ற­மும் எச்­ச­ரிக்கை விடுத்­தது.

இதை­ய­டுத்து, பெங்­க­ளூரு மாந­க­ராட்சி தலைமை ஆணை­யர் துஷார் கிரி­நாத், பொறி­யி­ய­லா­ளர்­களுக்கு அதிரடியாக எச்­ச­ரிக்கை விடுத்­தார். ஆங்­கிலப் புத்­தாண்டு தினத்­துக்­குள் அனைத்து சாலை குழி­க­ளை­யும் மூட வேண்­டும் என அவர் உத்­த­ர­விட்­டுள்­ளார்.

இதை­ய­டுத்து பெங்­க­ளூ­ரின் பல்­வேறு பகு­தி­க­ளி­லும் சாலைக் குழி­களை மூடு­வ­தற்­கான பணி­கள் நடை­பெற்று வரு­வ­தாக உள்­ளூர் ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்றன.