புதுடெல்லி: பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான வழக்கில் ஜனவரி 2ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கிறது. பணமதிப்பிழப்பிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது.
நீதிமன்றத்தில் கடந்த 7ஆம் தேதி நடந்த விவாதத்திற்குப் பதிலளித்த நீதிபதிகள், இது தொடர்பாக அரசு, ரிசர்வ் வங்கி எடுத்த முடிவுகள் குறித்த ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

