புகைபோக்கிக் கூண்டு இடிந்ததில் செங்கல் சூளை ஊழியர்கள் ஒன்பது பேர் உயிரிழப்பு

புகைபோக்கிக் கூண்டு இடிந்ததில் செங்கல் சூளை ஊழியர்கள் ஒன்பது பேர் உயிரிழப்பு

1 mins read
4c620a4a-b78e-4c29-8376-2af634bcd5f9
-

பாட்னா: பீகாரில் செங்­கல் சூளை ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் ஒன்பது பேர் உயி­ரி­ழந்­த­னர். மேலும் 15 பேர் காய­ம­டைந்­த­னர்.

பீகார் மாநி­லம், கிழக்கு சம்­பரன் மாவட்­டம், மோதி­ஹாரி நக­ருக்கு அருகே உள்ள நரிர்­கிர் பகு­தி­யில் செங்­கல் சூளை அமைக்கப்பட்டு, 25க்கும் மேற்­பட்ட ஊழியர்கள் பணி­புரிந்து கொண்டிருந்தனர்.

நேற்று முன்தினம் மாலை சூளை அருகே இருந்த புகைபோக்கிக் கூண்டில் திடீரென பெரும் வெடிப்புச் ­சத்­தம் கேட்­டது.

இந்தச் சத்­தத்தைக் கேட்டதும் பணியில் இருந்த ஊழியர்­கள் அலறி­யடித்­துக்கொண்டு ஓடி­னர்.

சற்று நேரத்தில் புகைபோக்கிக் ­கூண்டு சரிந்து விழுந்­த­தில் தரைப் பகுதியில் நின்று கொண்டிருந்த ஒன்பது பேர் இடிபாடுகளில் சிக்கி உயி­ரி­ழந்­த­னர். காய­ம­டைந்­த 15 பேர் மீட்­கப்­பட்டு அரு­கி­லுள்ள மருத்து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ள­னர்.

அந்த இடி­பா­டு­க­ளுக்­குள் மேலும் ஒரு சில ஊழியர்­கள் சிக்­கிக் கொண்­டிருக்கலாம் எனவும் நம்பப் படுகிறது. அவர்­களை மீட்­கும் பணி­யில் காவலர்களும் தீய­ணைப்­புப் படை­யி­ன­ரும் ஈடு­பட்­டுள்­ள­னர்.

இந்த விபத்­தில் சூளையின் உரி­மை­யா­ள­ரும் காய­ம­டைந்­துள்­ளார். மீட்­புப் பணி­களை மாவட்ட நிர்­வாக அதி­கா­ரி­கள் மேற்­பார்­வை­யிட்டு வரு­கின்­ற­னர். விபத்தில் உயிரிழந்தோருக்கு அம்மாநில முதல்வர் நிதீஷ்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.