10 அடி நீள சுரங்கம்; ₹1 கோடி தங்கம் சூறை

10 அடி நீள சுரங்கம்; ₹1 கோடி தங்கம் சூறை

2 mins read
90a2445c-e676-4e4f-a1c7-6e305fea69ae
-

கான்­பூர்: கான்­பூ­ரில் உள்ள பாரத ஸ்டேட் வங்­கியின் அருகில் 10 அடி நீள சுரங்­கம் தோண்டி உள்ளே நுழைந்த கொள்­ளை­யர்­கள், அங்கிருந்த நகைப் பெட்டகத்தை உடைத்து ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை சூறையாடிச் சென்றனர்.

இச்சம்­ப­வத்­தில் ஈடு­பட்ட குற்­ற­வா­ளி­களைப் பிடிப்­ப­தற்கு தனிப்­படை­கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன.

"தங்க நகை பாது­காப்­புப் பெட்­ட­கத்தை உடைத்த திருடர்கள் அதி­லி­ருந்த ஒரு கோடி ரூபாய் மதிப்­பி­லான 1.8 கிலோ தங்­கத்தை கொள்ளையடித்­துச் சென்­றுள்­ள­னர்.

எனினும், தங்க நகை பெட்­ட­கத்­தின் அரு­கில் இருந்த பணப்­பெட்­டகத்தை அவர்­க­ளால் உடைக்­க­முடி­யா­த­தால் அதி­ல் வைக்கப் பட்டிருந்த 32 லட்­சம் ரூபாய் பணம் தப்­பி­யது," என வங்கி அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

உத்­த­ரப் பிர­தேச மாநி­லம், கான்­பூ­ரில் மத்­திய அர­சுக்­குச் சொந்­த­மான ஸ்டேட் வங்­கி உள்ளது.

இதனை ஒட்­டி­யுள்ள காலி நிலத்­தில் இருந்து ஏறக்­கு­றைய 10 அடி நீளத்­திற்கு அடை­யா­ளம் தெரி­யாத கொள்­ளை­யர்­கள் சுரங்­கப்­பாதை தோண்டி அதன் வழி­யாக வங்­கிக்­குள் நுழைந்து ₹1 கோடி மதிப்­புள்ள தங்­கத்தை கொள்­ளை­யடித்­துச் சென்­றுள்­ளனர்.

"பணப்பெட்­ட­கத்தை திறக்க 'கேஸ் கட்­டர்' கரு­வி­யைக் கொள் ளையர்கள் பயன்­ப­டுத்தி உள்ளனர். எச்­ச­ரிக்கை மணி எழுப்­பும் கரு­வியை அவர்­கள் முடக்­கி­யி­ருந்­த­தும் விசாரணையில் தெரி­ய­வந்துள் ளது," என காவ­லர்­கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

வங்கியில் 29 வாடிக்­கை­யா­ளர்­களால் அடகு வைக்கப்பட்டிருந்த நகைகள் கொள்ளையடிக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக வங்­கி­யின் மேலா­ளர் நீரஜ் ராய் தெரி­வித்­துள்­ளார்.

இந்தச் சம்­ப­வம் குறித்து தீவிர விசா­ரணை நடைபெற்று வரும் நிலையில், தட­ய­வி­யல் நிபு­ணர்­கள் வங்கியில் பதி­வா­கி­யிருந்த கைரே­கை­களைப் பதிவு செய்­த­னர்.

முதற்­கட்ட விசா­ர­ணை­யில், வங்­கி­யில் பணிபுரியும் யாரோ ஒரு­வ­ரின் உத­வி­யுடன் இச்சம்பவம் நடந்­தி­ருக்­க­லாம் என்றும் பாது­காப்புப் பெட்­டக அறை இருக்­கும் பகுதி குறித்து நன்கு தெரிந்தவர்கள் கொள்­ளை­ய­டித்­தி­ருக்­க வாய்ப்பு இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.