நான்கு நாள்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை; 21 ரயில், விமானங்கள் புறப்பாடு தாமதம் வடமாநிலங்களில் குளிர், மூடுபனி

நான்கு நாள்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை; 21 ரயில், விமானங்கள் புறப்பாடு தாமதம் வடமாநிலங்களில் குளிர், மூடுபனி

2 mins read
72f8c29a-e38d-4010-8f97-4c8d1f598e3d
-

புது­டெல்லி: வடஇந்­தி­யா­வில் கடந்த சில நாள்­க­ளாக வெப்பநிலை குறைந்து கடும் பனி­மூட்­டம் நிலவி வரு­கிறது. அத்துடன், உட­லைச் சில்­லிட வைக்­கும் குளிர்­காற்­றும் வீசு­வ­தால் மக்­கள் வீடு­க­ளுக்­குள் முடங்கிப் போயுள்­ள­னர்.

தலைநகர் டெல்­லி­யில் 3 டிகிரி செல்­சி­யஸ் அள­வுக்கு கடு­ங்குளிர் வாட்டி வதைத்து வரும் நிலை­யில், வடமாநி­லங்­களில் அடுத்த நான்கு நாள்­கள் வரை அடர் பனிமூட்­டம் நீடிக்கும் என இந்திய வானிலை மையம் (ஐஎம்டி) ஆரஞ்சு எச்­ச­ரிக்கை விடுத்துள்ளது.

பஞ்சாப், டெல்லி, ராஜஸ்தான், ஹரியானா ஆகிய நான்கு மாநிலங் களிலும் குளிர் அலை வீச வாய்ப்பு உள்ளது என்றும் கடும் பனிப்பொழி வின் காரணமாக முதியவர்களும் குழந்தைகளும் வெளியில் செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது.

டெல்­லி­யின் ரிட்ஜ் பகு­தி­யில் வெப்பநிலை 3 டிகிரி செல்­சி­யசாக குறைந்து உறைகுளிர் நிலவியதால் மக்­கள் பெரும் அவ­தி­ய­டைந்­த­னர்.

அடர் பனிமூட்­டத்­தால் ரயில், விமானப் போக்­கு­வ­ரத்துகளும் கடு­மை­யா­கப் பாதிக்­கப்­பட்டன.

சாலையில் செல்லும் வாகனங்கள் மெதுவாகவும் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியும் சென்றன.

பனிப்பொழிவு காரணமாக விமா னச் சேவைகள் அதிகளவில் ரத்து செய்யப்பட்டன. சில விமானங்கள் தாமதமாகச் செல்வதையும் ரத்து செய்யப்படுவதையும் பயணிகளுக் குத் தெரிவிக்க ஏர் இந்தியா நிறு வனம் பயணிகள் சேவை மையத்தை துவங்கியுள்ளது.

அதேபோல், உ.பி., ராஜஸ்­தான், அரி­யானா மாநி­லங்­களும் குளி­ரின் பிடி­யில் சிக்­கித் தவிக்கின்­றன.

பஞ்­சாப் மாநி­லம், அமிர்­த­ச­ரஸ் உள்­ளிட்ட பல பகு­தி­களில் எதிரே வரும் வாக­னங்­கள் தெரி­யாத அள­வுக்கு பனி­மூட்­டம் காணப்­படுகிறது.

"மொத்த பஞ்­சாப் மாநி­ல­மும் குளி­ரில் உறைந்து போயுள்­ளது. அடர்­பனி ­மூட்­டத்­தால் வாக­னம் ஓட்­டு­வதே பெரும் சவா­லாக மாறி­யுள்­ளது. கைகால்­கள் விரைத்­துப் போய்­வி­டு­கின்­றன," என வாகன ஓட்­டி­கள் சிலர் தெரிவித்தனர்.

இமாச்­ச­லப் பிர­தே­சத்­தி­லும அடர் பனி­மூட்­டம் ஏற்­பட்­டுள்­ளது.

உத்­தரகாண்ட் மாநி­லத்­தில் கொட்­டும் பனி­யால் பல நீர்நிலை­கள் உறைந்து காணப்­படுகின்­றன.

டெல்­லி­யில் பனி­மூட்­டம் கார­ண­மாக 21 ரயில்­கள் தாம­த­மாக இயக்­கப்­ப­ட்டதாக வடக்கு ரயில்வே தெரி­வித்­துள்­ளது. இங்கு இரு நாள்­களுக்கு மிகமிக அடர் பனி­மூட்­டம் இருக்­கும் என்­றும் இந்­திய வானி­லை மையம் தெரி­வித்­துள்­ள­தால் மக்­கள் அச்­சத்தில் உள்­ள­னர்.

மூடு­பனி, கடும் குளிரை கருத்­தில் கொண்டு, பீகார் மாநி­லம் பாட்­னா­வில் 8ஆம் வகுப்பு வரை உள்ள பள்­ளி­கள் டிசம்­பர் 31 வரை மூடப்­படும் என்று மாவட்ட நிர்­வா­கம் அறி­வித்­துள்­ளது.