ராகுல்: சீனா, பாகிஸ்தான் போர் தொடுக்கும் சூழலுள்ளது

ராகுல்: சீனா, பாகிஸ்தான் போர் தொடுக்கும் சூழலுள்ளது

1 mins read
85ac015d-a6ad-422a-9a06-ee1af6557be0
-

புது­டெல்லி: இந்­தியா மீது போர் தொடுப்­ப­தற்­காக சீனா­வும் பாகிஸ் தானும் ஒன்­றா­கத் தயா­ரா­கிக் கொண்­டி­ருப்­ப­தாக காங்­கி­ரஸ் முன்­னாள் தலை­வர் ராகுல் காந்தி தெரி­வித்­துள்­ளார்.

ராகுல்­ காந்­தி­யின் இந்­திய ஒற்­றுமைப் பய­ணம் டெல்­லி­யில் 109 வது நாளாகத் தொடர்ந்தது. இந்திய பாதுகாப்புப் படையில் பணியாற்றி ஓய்வுபெற்ற வீரர்களுடன் உரை யாடிய ராகுல்காந்தி, யூடி­யூப் ஒளி­வழி ஒன்­றுக்குப் பேட்டி அளித்­துள்ளார்.

"இந்­தி­யா­வுக்கு எதி­ராக சீனா­வும் பாகிஸ்­தா­னும் ஒன்று சேர்ந்துள்ளனர். போர் வெடிக்கும் சூழலில் நாடுகள் இரண்டும் இணைந்து இந்­தியா மீது தாக்­கு­தல் நடத்­த வாய்ப்புள்ளது," என்­று அவர் எச்சரித்­துள்­ளார்.

அண்­மை­யில் அரு­ணா­ச­லப் பிர­தேச எல்­லைப் பகு­தி­யில் என்ன நடந்­தது என்­பதை நாட்­டிற்கு மத்­திய அரசு சொல்லவேண்­டும் என்றும் வலி­யு­றுத்தி உள்ள ராகுல் காந்தி, நாம் என்ன நட­வ­டிக்கை எடுப்­ப­தாக இருந்­தா­லும் அதை உடனே விரைவாக எடுக்கவேண்­டும். இதனை, ஐந்து ஆண்­டு­களுக்கு முன்பே எடுத்­தி­ருக்­க­வேண்­டும். கால தாம­தம் செய்­தால் நாடுதான் முற்றிலும் பாதிக்­கப்­படும் என்­றும் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.