பாகிஸ்தானில் இருந்து வந்த படகு ஆயுதங்கள், ரூ.300 கோடி போதைப்பொருளுடன் பறிமுதல்

பாகிஸ்தானில் இருந்து வந்த படகு ஆயுதங்கள், ரூ.300 கோடி போதைப்பொருளுடன் பறிமுதல்

1 mins read
1451787f-2061-4843-9953-78b0ec268afe
-

குஜ­ராத்: குஜ­ராத் மாநி­லம், துவா­ரகா பகு­திக்­குள் நுழைந்த பாகிஸ்­தான் பட­கிலிருந்த ஏரா­ள­மான துப்பாக்கிகள், குண்டுகள் உள்ளிட்ட ஆயு­தங்­கள், ரூ.300 கோடி மதிப்­பி­லான 40 கிலோ போதைப்­பொ­ருள் ஆகி­யவை பறி­மு­தல் செய்­யப்­பட்­டன.

பட­கில் இருந்த பத்து பாகிஸ்­தா­னி­யர்­க­ளை­யும் இந்­தி­யக் கட­லோ­ரக் காவல்­ப­டை­யி­னர் கைது செய்­த­னர்.

இந்­தியக் கடல் எல்­லைப் பகு­திக்குள் அந்­நிய நாட்டுப் பட­கு­கள், கப்­பல்கள் மூல­மாக போதைப்­பொருள் கடத்­தப்­ப­டு­வது அண்மைக் கால­மாக அதி­க­ரித்து வரு­கிறது.

இந்­நி­லை­யில், இதனைத் தடுக் கும் வகையில், கட­லோ­ரப் பாது­காப்­புப் படையி­ன­ரும் குஜ­ராத் பயங்­ க­ர­வாத தடுப்­புப் படை­யி­ன­ரும் ஒன்றிணைந்து குஜ­ராத்­தின் ஓகா கடற்­க­ரை­யில் சுற்­றுக்­கா­வல் பணி­யில் ஈடு­பட்­டுக்கொண்­டி­ருந்தனர்.

அப்­போது நள்­ளி­ரவு நேரத்­தில் பாகிஸ்­தான் படகு ஒன்று இந்­திய எல்­லைக்­குள் அத்­து­மீறி நுழைந்­தது.

அந்­தப் படகை இந்­தியக் கட­லோரப் பாது­காப்­புப் படை­யி­னர் தடுத்து நிறுத்த முயன்­ற­போது, அல் சொஹாலி என்ற மீன்பிடிப் படகு நிற்­கா­மல் சென்­றதை அடுத்து, துப்­பாக்­கி­யால் சுட்டு படகை எச்சரித்து நிறுத்தினர்.

இது தொடர்­பாக இந்­தியக் கட­லோரக் காவல் படை வெளி­யிட்டுள்ள அறிக்­கை­யில், பறி­மு­தல் செய்­யப்­பட்ட பட­கில் இருந்து ஆயு தங்கள், போதைப்­பொ­ருள்களுடன் 10 பேர் கைது செய்­யப்­பட்­ட­தாகக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இது­வரை ரூ.1,930 கோடி மதிப்­பி­லான 346 கிலோ போதைப்­பொருள்களும் பாகிஸ்­தானைச் சேர்ந்த 44 பேரும் ஈரானைச் சேர்ந்த ஏழு பேரும் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர் என்­றும் அறிக்­கை­ விவரம் தெரி­வித்­துள்­ளது.