காந்தி நகர்: குஜராத்தைச் சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவர், தன் காதலனுக்காக பி.காம் 3ஆம் ஆண்டு தேர்வெழுதி கையும் களவுமாகத் தேர்வு அதிகாரிகளிடம் சிக்கிக்கொண்டார்.
குஜராத் மாநிலத்தில் உள்ள வீர் நர்மத் பல்கலைக்கழகத்தில் நடந்த இச்சம்பவத்தைத் தொடர்ந்து, பெண் ணின் பி.காம் பட்டப்படிப்பை சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகம் ரத்து செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அத்துடன், அந்தப் பெண் பார்த்து வந்த அரசாங்க வேலையை இழக்கும் சூழலும் நிலவுவதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, கல்லூரி நிர்வாகம், சுற்றுலா சென்ற மாணவனுக்கு மூன்று ஆண்டு காலம் தேர்வெழுத தடை விதித்துள்ளது.
தேர்வெழுதிய பெண்ணும் அவரது காதலனும் பள்ளிப்பருவத்திலிருந்தே நண்பர்கள் என்பதும் தன் காதலனுக்காக ஆள்மாறாட்டம் செய்து தேர்வெழுதிய விவகாரம் அப்பெண்ணின் பெற்றோருக்குத் தெரியாது என்றும் அதிகாரி ஒரு வர் தெரிவித்துள்ளார்.
மாணவன் மூன்றாமாண்டு பி.காம் தேர்வில் தொடர்ந்து தோல்வியுற்று வந்ததால் அவருக்காக அவரது காதலி தேர்வெழுத துணிந்ததும் தெரியவந்தது.
இந்நிலையில், அந்த மாணவி காதலனுக்காகத் தேர்வு எழுதிக் கொண்டிருந்தபோது தேர்வு அதிகாரிகளின் சோதனையில் அவர் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதுவதைக் கண்டுபிடித்தனர்.
காதலனைத் தேர்வில் வெற்றி பெறச் செய்யவேண்டும் என்ற எண்ணத்தோடு, அவரது புகைப்படத்துக்குப் பதிலாக தன் புகைப்படத்தைப் பயன்படுத்தி மாணவனின் தேர்வு அனுமதிச் சீட்டில் உள்ள பெயர் உள்ளிட்ட விவரங் களையும் சட்டவிரோதமாக மாற்றம் செய்ததும் விசாரணையில் அம்பலமானது.
இதையடுத்து அந்த மாணவியைத் தேர்வு அறையில் இருந்து வெளி யேற்றிய தேர்வு அதிகாரிகள், அவர் மீது காவல்துறையில் புகார் அளித்தனர். காதலனுக்காக அதிக அளவில் சிரமப்பட்டு, ஆள் மாறாட்டம் செய்து தேர்வெழுதிய மாணவி தற்போது தன் வாழ்க்கையையே தொலைத்து விட்டு நிற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

