உக்ரேனில் அமைதி நிலவ உதவவேண்டும் என மோடியிடம் ஜெலன்ஸ்கி கோரிக்கை

உக்ரேனில் அமைதி நிலவ உதவவேண்டும் என மோடியிடம் ஜெலன்ஸ்கி கோரிக்கை

1 mins read
d3e16730-8c17-4953-b3c4-1062585a6d5e
-

புதுடெல்லி: பிரதமர் மோடியுடன் தொலைபேசி வழி உரையாடிய உக்ரேன் அதிபர் விளா­டி­மிர் ஜெலன்ஸ்கி, இந்தியா செய்த மனிதாபிமான உதவிகளுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.

ஜெலன்ஸ்­கியு­டன் பிர­த­மர் நரேந்­திர மோடி கலந்­து­ரை­யா­டிய­போது, "ரஷ்யா-உக்­ரேன் அமை­திப் பேச்சு­வார்த்தை முயற்­சி­களுக்கு இந்­தியா ஆத­ரவு அளிக்­கும்," என்று தெரி­வித்தவர், "போரி­னால் பாதிக்­கப்­பட்­டுள்ள மக்­க­ளுக்கு வழங்­கப்­பட்டு வரும் மனி­தா­பி­மான உத­வி­களை இந்­தியா தொடர்ந்து வழங்­கும்," என்று உறு­தி­ய­ளித்­தார்.

அத்துடன், எந்த ஒரு பிரச்சி னைக்கும் ராணுவ நட­வ­டிக்கை தீா்வாகாது என்­றும் இரு­தரப்­பி­லும் அமை­திப்­ பேச்­சு­வார்த்தை மூலம் தீர்வு எட்­டப்­பட வேண்­டும் என்­றும் பிர­த­மர் எடுத்துரைத்தார்.

இந்­திய-உக்­ரேன் நட்­பு­றவு குறித்து பேசிய பிர­த­மர், உக்­ரே­னில் இருந்து நாடு திரும்­பிய மாண­வர்­கள் மீண்­டும் அங்கேயே கல்­வி­யைத் தொடர அந்­நாட்டு அதி­கா­ரி­கள் மூலம் வச­தி­களை செய்து தரும்­படியும் வேண்டு­கோள் விடுத்­தார்.

இந்த உரையாடலுக்குப் பின் அதிபர் ஜெலன்ஸ்கி தன் டுவிட்டர் பக்கத்தில், "பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் உரையாடியபோது, ஜி20 நாடு­களுக்கு இந்தியா தலைமை பொறுப்­பேற்­றுக்­கொண்­ட­தற்கு வாழ்த்துகள் தெரிவித்தேன். உக்ரேனில் அமைதி நிலவ உதவ வேண்டும் எனவும் ஐநாவில் உக்ரே னுக்கு ஆதரவான நிலைப்பாட்டை இந்தியா எடுத்ததற்கு நன்றி கூறி னேன்," எனவும் பதிவிட்டுள்ளார்.