மும்பை: கர்நாடக சட்டப்பேரவையில், முன்னதாக எல்லைப் பகுதி பிரச்சினையில் மாநிலத்தின் நலனை காக்கும் நோக்கில் முதல்வர் பசவராஜ் பொம்மை கொண்டு வந்த தீர்மானத்தை சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஒரு மனதாக நிறைவேற்றினர்.
இதற்குப் பதிலடியாக மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் மகாராஷ்டிரா-கர்நாடகா எல்லை பிரச்சினை தொடர்பான தீர்மானத்தை மகாரஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தாக்கல் செய்தார்.
அந்தத் தீர்மானத்தில், "கர்நாடகாவில் உள்ள பெல்காம், கார்வாா, நிபானி, பால்கி, பிதார் ஆகிய நகரங்கள் மற்றும் மராத்தி மொழி பேசும் மக்கள் வாழும் 865 கர்நாடகாவின் சிற்றூர்களை மகாராஷ்டிராவுடன் இணைக்க உச்ச நீதிமன்றத்தில் தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்," என்று கூறப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் உள்ள பெல்காம், கார்வார், நிபானி, பால்கி, பிதார் ஆகிய நகரங்கள் மற்றும் மராத்தி மொழி பேசும் மக்கள் உள்ள 865 கிராமங்களை மகாராஷ்டிராவுடன் இணைக்க உச்ச நீதிமன்றத்தில் தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தின் எல்லையில் மராத்தி மொழி பேசும் மக்கள் வசிக்கும் பகுதிகள் மகாராஷ்டிராவுடன் இணைக்கப்பட வேண்டும் என அம்மாநிலம் உரிமை கோரி வருகிறது. அண்மை காலமாக கர்நாடகா - மகாராஷ்டிரா எல்லை விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிரா இந்தத் தீர்மானத்தை சட்டப்பேரவையில் நிறைவேற்றியுள்ளது.
மகாராஷ்டிரா - கர்நாடகா இடையே எல்லைப் பிரச்சினை தொடர்பாக தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.

