கடும் பனிமூட்டம்: விமானங்கள் தாமதம்

2 mins read
28041d47-da80-44f4-9e03-916be9a4b4d2
-

புது­டெல்லி: டெல்லி, உத்­த­ர­பி­ர­தே­சம், பஞ்­சாப் உள்­ளிட்ட வட மாநி­லங்­களில் வழக்­கத்­திற்கு மாறாக கடும் பனி மூட்­டம் நில­வு­கிறது.

டெல்­லி­யில் மூன்று டிகிரி செல்­சி­யஸ் அள­வுக்கு கடும் குளிர் வாட்டி வதைக்­கிறது. இத­னால் அங்கு ரயில் மற்­றும் சாலைப் போக்­கு­வ­ரத்­து­க­ளின் சேவை தடை­பட்டு மக்­க­ளின் இயல்பு வாழ்க்கை பெரி­தும் பாதிக்­கப்­பட்­டுள்­ளன.

இந்­நி­லை­யில் மேலும் நான்கு நாட்­கள் அடர் பனி மூட்­டம் நீடிக்­கும் என இந்­திய வானிலை ஆய்வு நிலை­யம் ஆரஞ்சு எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது. அடர் பனி மூட்­டத்­தால் ரெயில், விமா­னப் போக்­கு­வ­ரத்­தும் கடு­மை­யாக பாதிக்­கப்­பட்­டுள்­ளன.

ஆண்டு இறுதி விடு­முறை கால­மான இப்­போது ஏரா­ள­மா­னோர் வெளி­நா­டு­க­ளுக்­கும் வெளி மாநி­லங்­க­ளுக்­கும் சுற்­றுப்­ப­ய­ணம் மேற்­கொண்­டுள்­ள­னர். இந்­நி­லை­யில், வட இந்­தி­யா­வின் பெரும்­பா­லான இடங்­களில் ஏற்­பட்­டுள்ள அடர்ந்த மூடு­ப­னி­யால் பல விமான நிலை­யங்­களில் விமா­னச் சேவை பெரி­தும் பாதிக்­கப்­பட்­டுள்­ளது.

பனிப்­பொ­ழிவு கார­ண­மாக டெல்லி இந்­திரா காந்தி அனைத்­து­லக விமான நிலை­யத்­தில் கடந்த மூன்று நாட்­களில் சுமார் 100 விமா­னங்­கள் தரை­யி­றங்­கு­வ­தில் தாம­தம் ஆனது. மேலும், டெல்­லி­யில் தரை­யி­றங்க வேண்­டிய இரண்டு விமா­னங்­கள் ஜெய்ப்­பூ­ருக்கு திருப்பி விடப்­பட்­டன. டெல்லி விமான நிலை­யத்­தில் விமா­னங்­கள் புறப்­ப­டு­வ­தி­லும் தரை­யி­றங்­கு­வ­தி­லும் ஏற்­பட்ட தாம­தத்­தால் ஏரா­ள­மான பய­ணி­கள் விமான நிலை­யத்­தி­லேயே நீண்ட நேரம் காத்­துக்­கொண்­டி­ருக்­கும் நிலைமை ஏற்­பட்­டுள்­ளது.

இந்த ஆண்­டில் இதுவே அதி­க­மான பனி­மூட்­டம் என்று இந்­திய வானிலை ஆய்வு நிலை­யம் தெரி­வித்­துள்­ளது. இந்­நி­லை­யில், உத்­த­ரப்­பி­ர­தேச மாநி­லத்­தில் ஆக்ரா - லக்னோ விரைவு சாலை­யில் நேற்று முன்தினம் கனரக வாகனம் மீது கார் மோதி­ய­தில் மூன்று பேர் உயி­ரி­ழந்­த­னர். மூடு­பனி கார­ண­மாக இந்த விபத்து ஏற்­பட்­ட­தாக காவல்துறை தெரி­வித்­த­து. டெல்லி நோக்கி சென்று கொண்­டி­ருந்த கார், கன்­னோஜ் பகு­தி­யில் கட்­டுப்­பாட்டை இழந்து டிரக் மீது மோதி­யதால் இந்த விபத்து ஏற்பட்டது.