ஜம்முவில் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்முவில் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

2 mins read
ad71a8dc-0838-4059-9bbe-87d342e340e9
-

ஜம்மு: ஜம்­மு­வில் ராணு­வத்­தி­னர் வாக­னச் சோதனை மேற்­கொண்­டனர். அப்­போது தீவி­ர­வா­தி­க­ளுக்­கும் ராணு­வத்­தி­ன­ருக்­கும் நடந்த துப்­பாக்­கிச் சூட்­டில் மூன்று தீவி­ர­வா­தி­கள் சுட்­டுக் கொல்­லப்­பட்­ட­னர். அந்த வாக­னத்தை ஓட்­டி­வந்த ஓட்­டு­நர் மட்­டும் தப்­பி­விட்­டார். அவ­ரைத் தேடும் பணி முடுக்­கி­வி­டப்­பட்­டுள்­ளது. நேற்று உள்­துறை அமைச்­சர் அமித் ஷா தலை­மை­யில் ஜம்மு-காஷ்­மீர் பாது­காப்பு குறித்து ஆலோ­ச­னைக் கூட்­டம் நடை­பெ­ற­வி­ருந்­தது. இந்­நி­லை­யில் இந்­தச் சம்­ப­வம் நிகழ்ந்­துள்­ளது.

இது­கு­றித்து ஜம்­மு­வின் காவல்­துறை கண்­கா­ணிப்­பா­ளர் முகேஷ் சிங் கூறு­கை­யில், "வழக்­கம் போல் ஜம்­மு­வில் வாக­னச் சோத­னை­யில் ஈடு­பட்­டி­ருந்­தோம். காலை சுமார் 7 மணி அள­வில் அந்த வழி­யாக சந்­தே­கத்­திற்கு இட­மான வகை­யில் ஒரு கன­ரக வாக­னம் வந்­தது.

பொது­வாக அந்த நேரத்­தில் அந்­தப் பகுதி வழி­யாக கன­ரக வாகனம் ஏதும் வரு­வ­தில்லை.

"வாக­னம் அருகே வரட்­டும் என்று காத்­தி­ருந்­தோம். அப்­போது, திடீ­ரென்று வாக­னத்­தி­லி­ருந்து இறங்­கிய ஓட்­டு­நர் சிறு­நீர் கழிக்­கச் செல்­வது போல் மறை­வான பகு­திக்­குச் சென்­றார். ஆனால் அவர் நீண்ட நேரம் திரும்­ப­வில்லை. இத­னால் சந்­தே­கத்­தின் பேரில் நாங்­கள் அந்த வாக­னத்தை நெருங்­கி­னோம். அப்­போது வாக­னத்­தி­லி­ருந்து எங்­களை நோக்கி துப்­பாக்­கிக் குண்­டு­கள் வந்­தன. உடனே நாங்­கள் சுதா­ரித்­துக் கொண்டு பதில் தாக்­கு­தல் நடத்­தி­னோம். இதில் அந்த கன­ரக வாக­னத்­தில் இருந்த மூன்று தீவி­ர­வா­தி­கள் சுட்­டுக் கொல்­லப்­பட்­ட­னர்.

"தப்பி ஓடிய ஓட்­டு­நரை தேடி வரு­கி­றோம். வாக­னத்­தில் இருந்த வெடிப் பொருட்­கள் வெடித்­த­தால் வாக­னம் தீ பிடித்­தது. தீய­ணைப்பு வாக­னம் வர­வ­ழைக்­கப்­பட்டு தீ அணைக்­கப்­பட்­டது," என்று அவர் கூறி­னார்.