கேரளாவில் தேசிய புலனாய்வு முகமை அதிரடி சோதனை

கேரளாவில் தேசிய புலனாய்வு முகமை அதிரடி சோதனை

2 mins read
68b8883e-746b-4547-b6e3-f2819b642dc2
-

'பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா' அமைப்பு மறைமுகமாக இயங்குவதாக தகவல்

புது­டெல்லி: மத்­திய அர­சால் அண்­மை­யில் தடை செய்­யப்­பட்ட 'பாப்­பு­லர் ஃபிரண்ட் ஆஃப் இந்­தியா' அமைப்­புக்கு பலர் ரக­சி­ய­மாக நிதி­யு­தவி செய்­வ­தா­கக் கிடைத்த தக­வலை அடுத்து தேசிய புல­னாய்வு முகமை அதி­கா­ரி­கள் கேர­ளா­வின் பல்­வேறு பகு­தி­களில் கடந்த இரு நாள்­க­ளாக அதி­ரடி சோதனை நட­வ­டிக்கை மேற்­கொண்­ட­னர்.

சட்­ட­வி­ரோத நட­வ­டிக்­கை­கள் தடுப்­புச் சட்­டத்­தின் கீழ் 'பாப்­பு­லர் ஃபிரண்ட் ஆஃப் இந்­தியா' அமைப்­புக்கு ஐந்து ஆண்­டு­கள் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

அந்த அமைப்பு நாட்­டில் அமை­தியைச் சீர்­கு­லைத்து பயங்­க­ர­வாத செயல்­களை ஊக்­கு­விப்­ப­தா­கக் குற்­றம்­சாட்­டப்­பட்­டுள்­ளது.

மேலும், பயங்­க­ர­வாத செயல்­பாடு­க­ளுக்கு நிதி­ய­ளித்­தல், நாட்­டின் அர­சி­யல் சட்ட அமைப்பை மதிக்­கா­மல் பொது ஒழுங்கை சீர்­கு­லைக்­கும் தொடர் குற்­றங்­களில் ஈடு­ப­டு­தல் ஆகிய குற்­றச்­சாட்­டு­க­ளுக்­கும் அந்த அமைப்பு ஆளா­கி­யுள்­ளது.

கடந்த பதி­னைந்து ஆண்­டு­க­ளுக்கு முன்­னர் தொடங்­கப்­பட்ட 'பாப்­பு­லர் ஃபிரண்ட் ஆஃப் இந்­தியா' அமைப்பு நாடு முழு­வ­தும் 22 மாநி­லங்­களில் செயல்­பட்டு வந்­தது.

மத்­திய அர­சின் தடை உத்­த­ர­வுக்­குப் பிற­கும் அந்த அமைப்­பு­டன் தொடர்­புள்­ள­வர்­கள் விசா­ரிக்­கப்­பட்டு வந்­த­னர்.

இந்­நி­லை­யில், பயங்­க­ர­வாத செயல்­பா­டு­க­ளுக்கு உத­விக்­க­ரம் நீட்­டிய இந்த அமைப்பு மத்­திய அர­சால் தடை செய்­யப்­பட்ட பிற­கும்­கூட ரக­சி­ய­மாக இயங்கி வரு­கிறது என்­றும் பல்­வேறு தரப்­பி­னர் இதற்கு நிதி­யு­தவி அளிப்­ப­தா­க­வும் தேசிய புல­னாய்வு முக­மைக்கு ரக­சி­யத் தக­வல் கிடைத்­தது.

அதன் பேரில் கேரள மாநி­லத்­தின் திரு­வ­னந்­த­பு­ரம், எர்­ணா­கு­ளம், கொல்­லம், ஆலப்­புழா, மலப்­பு­ரம் மாவட்­டங்­களில் அந்த முக­மை­யைச் சேர்ந்த அதி­கா­ரி­கள் கடந்த இரு தினங்­க­ளாக அதி­ரடி சோதனை நட­வ­டிக்கை மேற்­கொண்­ட­னர். மொத்­தம் 56 இடங்­களில் சோதனை நடை­பெற்றது.

அந்த அமைப்­பின் முக்­கிய உறுப்­பி­னர்­கள், களப்­ப­ணி­யா­ளர்­க­ளின் இல்­லங்­களில் சோதனை நடை­பெற்­ற­தா­க­வும் பல்­வேறு முக்­கிய ஆவ­ணங்­கள் கைப்­பற்­றப்­பட்­ட­தா­க­வும் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

அந்த அமைப்­பின் அலு­வ­ல­கங்­க­ளுக்கு ஏற்­கெ­னவே சீல் வைக்­கப்­பட்­டி­ருந்­தது. எனி­னும், அந்த முத்­தி­ரையை அகற்­றி­விட்டு, அதி­கா­ரி­கள் மீண்­டும் சோதனை மேற்­கொண்­ட­னர்.

இந்­தச் சோதனை நட­வ­டிக்கை இன்­றும் நீடிக்­கும் வாய்ப்­புள்­ள­தா­க­வும் அந்த அமைப்­பின் முக்­கி­யப் பிர­மு­கர்­கள் விசா­ரிக்­கப்­ப­டுவர் என்­றும் கூறப்­ப­டு­கிறது.