புலம்பெயர்ந்தோர் வாக்களிக்க தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் அறிமுகம்

புலம்பெயர்ந்தோர் வாக்களிக்க தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் அறிமுகம்

2 mins read
27cb00d1-a08e-4049-93dc-c3b48069e8dc
-

புது­டெல்லி: புலம்பெயர்ந்­தோர் தற்­போது வசிக்­கும் இடங்­களில் இருந்­த­ப­டியே தேர்­த­லில் வாக்­க­ளிக்க ஏது­வாக தொலை­தூர மின்­னணு வாக்­குப்­ப­திவு இயந்­தி­ரத்தை அறி­மு­கப்­ப­டுத்த உள்­ளது இந்­தி­யத் தேர்­தல் ஆணை­யம்.

பல்­வேறு கார­ணங்­க­ளுக்­காக சொந்த ஊரை­விட்டு வெளி­யூர் அல்­லது வெளி மாநி­லங்­க­ளுக்­குச் சென்­ற­வர்­கள் இந்­தப் புதிய இயந்­தி­ரத்­தின் மூலம் தேர்­த­லில் தங்­க­ளு­டைய வாக்­கு­க­ளைப் பதிவு செய்ய இய­லும்.

'ரிமோட் மின்­னணு வாக்­குப்­பதிவு இயந்­தி­ரங்­கள்' (ஆர்­வி­எம்) என்று குறிப்­பி­டப்­படும் இந்த இயந்­தி­ரங்­க­ளின் செயல்­பாட்டை நிரூ­பிக்க நாடு முழு­வ­தும் உள்ள அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட 8 தேசிய, 57 மாநில அர­சி­யல் கட்­சி­க­ளுக்கு தேர்­தல் ஆணை­யம் அழைப்பு விடுத்­துள்­ளது.

இந்த இயந்­தி­ரங்­க­ளின் செயல்­பாட்டை நிரூ­பிக்­கும் அந்த நிகழ்­வுக்கு எதிர்­வ­ரும் ஜன­வரி 16ஆம் தேதி ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

இந்த நவீன இயந்­தி­ரங்­க­ளைப் பயன்­ப­டுத்­து­வது தொடர்­பில் எழக்­கூ­டிய சட்ட, நிர்­வாக, தொழில்­நுட்ப சவால்­கள் குறித்து அர­சி­யல் கட்­சி­க­ளுக்கு ஏற்­கெ­னவே விவ­ரங்­கள் அனுப்­பப்­பட்­டுள்­ள­தா­க­வும் தங்­க­ளுக்கு எழக்­கூ­டிய சந்­தே­கங்­கள் குறித்து அக்­கட்­சி­கள் உட­னுக்­கு­டன் கேள்வி எழுப்­ப­லாம் என்­றும் தேர்­தல் ஆணை­யம் கூறி­யுள்­ளது.

மேலும், இந்­தப் புதிய இயந்­தி­ரங்­கள் குறித்து எதிர்­வ­ரும் ஜனவரி 31ஆம் தேதிக்­குள் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட அர­சி­யல் கட்­சி­க­ளின் எழுத்­து­பூர்வ கருத்­து­களை தேர்­தல் ஆணை­யம் கோரி­யுள்­ளது.

தற்­போது சட்­ட­மன்ற, நாடா­ளு­மன்றத் தேர்­தல்­களில் மின்­னணு வாக்­குப்­ப­திவு இயந்­தி­ரங்­கள் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. இந்த நடை­முறை குறித்து பல்­வேறு அர­சி­யல் கட்­சி­கள் சந்­தே­கங்­களை எழுப்­பி­யுள்­ளன. இந்த இயந்­தி­ரங்­க­ளின் நம்­ப­கத்­தன்மை தொடர்­பாக கேள்­வி­கள் எழுந்­துள்ள நிலை­யில், தேர்­தல் ஆணை­யத்­தின் புதிய அறி­விப்பு வெளி­வந்­துள்­ளது.

இதற்­கி­டையே நாடா­ளு­மன்­றத்­துக்­கும் சட்­ட­மன்­றத்­துக்­கும் ஒரே நேரத்­தில் தேர்­தல் நடத்­தும் வகை­யி­லான 'ஒரே நாடு ஒரே தேர்­தல்' என்ற புதிய நடை­முறை­யைச் செயல்­ப­டுத்­து­வ­தி­லும் மத்­திய அரசு தீவி­ரம் காட்டி வரு­கிறது.

இது தொடர்­பா­க­வும் அர­சி­யல் கட்­சி­க­ளி­டம் கருத்து கேட்­கப்­பட்­டுள்­ளது.