சீக்கியர்கள் தங்களது பத்தாவது குருவான குரு கோபிந்த் சிங்கின் பிறந்த நாளை நேற்று கொண்டாடினர். இதற்காக அமிர்தசரஸ் நகரில் உள்ள பொற்கோவிலுக்கு நேற்று ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் வருகை புரிந்து தங்கள் குருவுக்கு மரியாதை செலுத்தினர். கடந்த சில நாள்களாக வட மாநிலங்களில் கடும் குளிரும் பனிப்பொழிவும் நீடித்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. எனினும், குளிரைப் பொருட்படுத்தாமல் சீக்கியர்கள் பொற்கோவிலுக்கு வந்ததாக வட மாநில ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
படம்: ஏஎஃப்பி

