ஐயப்ப பக்தர்களிடம் லஞ்சம் வசூலித்த கேரள அதிகாரிகள் மீது நடவடிக்கை

ஐயப்ப பக்தர்களிடம் லஞ்சம் வசூலித்த கேரள அதிகாரிகள் மீது நடவடிக்கை

2 mins read
b652eadb-ea24-4bd8-85ac-c40c6d3328d4
-

திரு­வ­னந்­த­புரம்: தமி­ழ­கத்­தைச் சேர்ந்த ஐயப்ப பக்­தர்­க­ளி­டம் பணம் வசூ­லித்த கேரள அதி­கா­ரி­க­ளி­டம் காவல்­துறை விசா­ரணை நடத்தி வரு­கிறது.

இந்த ஆண்டு கொரோனா கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்­டுள்­ளதை அடுத்து, சப­ரி­ம­லைக்கு வரும் பக்­தர்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்­ளது.

இந்­நி­லை­யில், தமி­ழ­கத்­தில் இருந்து சப­ரி­ம­லைக்கு வாக­னங்­களில் செல்­லும் பக்­தர்­க­ளி­டம் ஆரி­யங்­காவு பகு­தி­யில் அமைக்­கப்­பட்­டுள்ள போக்­கு­வ­ரத்து சோத­னைச் சாவ­டி­யில் கேரள அதி­கா­ரி­கள் லஞ்­சம் வாங்­கு­வ­தாக புகார்­கள் எழுந்­தன.

இதை­ய­டுத்து, கேரள லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் மாறு வேடத்­தில் சென்று லஞ்­சம் வாங்­கும் அதி­கா­ரி­க­ளைக் கைது செய்ய முடி­வெ­டுத்­த­னர். அதன்­படி, நேற்று முன்­தி­னம் காவல்­துறை அதி­கா­ரி­கள் ஐயப்ப பக்­தர்­கள் போல் வேட­ம­ணிந்து ஆரி­யங்­காவு சென்­ற­னர்.

அப்­போது சோத­னைச் சாவடி அலு­வ­ல­கம் முன்பு நின்­றி­ருந்த முக­வர் ஒரு­வர், அவ்­வ­ழியே சென்ற ஆட்டோ ஓட்­டு­நர்­கள், வாக­னங்­களில் வந்த ஐயப்ப பக்­தர்­க­ளி­டம் பணம் வசூ­லித்­துக் கொண்­டி­ருந்­தார். லஞ்ச ஒழிப்­புத்­துறை அதி­கா­ரி­கள் அவ­ரைப் பிடிக்க முயன்­ற­போது ஓட்­டம்­பி­டித்­தார்.

இதை­ய­டுத்து, போக்­கு­வ­ரத்து துறை­யின் அலு­வ­ல­கத்­தில் லஞ்ச ஒழிப்பு அதி­கா­ரி­கள் சோதனை மேற்­கொண்­ட­னர். அப்­போது போக்­கு­வ­ரத்து துறை அதி­கா­ரி­க­ளின் மேசை மீது கணக்­கில் வராத ரொக்­கப் பணம், தின்­பண்­டங்­கள் ஆகி­யவை காணப்­பட்­டன.

நேற்­றும் இந்த சோதனை நட­வ­டிக்கை நீடித்­தது. கணக்­கில் வராத ரொக்­கப் பணத்தை லஞ்ச ஒழிப்பு அதி­கா­ரி­கள் கைப்­பற்றி விசா­ரணை மேற்­கொண்­டுள்­ள­னர்.

காவல்­து­றை­யின் நட­வ­டிக்­கையை பக்­தர்­கள் பாராட்டி உள்­ள­னர். இதற்­கி­டையே, சப­ரி­ம­லை­யில் கடந்த 41 நாள்­களில் 30 லட்­சம் பக்­தர்­கள் தரி­ச­னம் செய்­துள்­ள­னர்.

கோவி­லுக்கு வந்த பக்­தர்­கள் வாங்­கிய அப்­பம், அர­வணை, உண்­டி­யல் காணிக்கை மூலம் ரூ.223 கோடி வரு­வாய் கிடைத்­துள்­ளது.