விசாகப்பட்டினம்: இணையம் வழி பகுதி நேர வேலை செய்து பணம் சம்பாதிக்கலாம் என்று விளம்பரப்படுத்தி மோசடி செய்த கும்பல் கைதாகி உள்ளது.
ஆறு பேர் கொண்ட அந்த கும்பலிடம் இருந்து 30 கைப்பேசிகள், 26 ஏடிஎம் அட்டைகள், 37 வங்கி காசோலைகள் ஆகியவற்றை விசாகப்பபட்டினம் காவல்துறை பறிமுதல் செய்துள்ளது.
இவர்களிடம் இல்லத்தரசிகள், வேலையில்லாத இளையர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் மட்டுமல்லாமல், அரசு ஊழியர்கள், மருத்துவர்களும்கூட ஏமாந்து போயுள்ளனர். பகுதி நேர வேலையைப் பெற முன்பணம் செலுத்த வேண்டும் எனக் கூறி, 78 பேரிடம் 2.45 கோடி ரூபாய் பணத்தை இந்தக் கும்பல் சுருட்டி உள்ளது.

