மத்திய சுகாதார அமைச்சு: அடுத்த 40 நாள்களுக்கு மிகுந்த முன்னெச்சரிக்கை

மத்திய சுகாதார அமைச்சு: அடுத்த 40 நாள்களுக்கு மிகுந்த முன்னெச்சரிக்கை

1 mins read
03171c4b-1b74-4fef-9f3b-dbc3542e6c71
-

புது­டெல்லி: பல்­வேறு நாடு­களில் கொரோனா தொற்­றுப்­ப­ர­வல் மீண்­டும் அதி­க­ரித்­துள்ள நிலை­யில், அடுத்த 40 நாள்­க­ளுக்கு மிகுந்த கவ­னத்­து­ட­னும் முன்­னெச்­ச­ரிக்­கை­யு­ட­னும் செயல்­பட வேண்­டும் என மத்­திய சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

இக்­கா­ல­கட்­டத்­தில் நாடு முழு­வ­தும் தொற்­றுப்­ப­ர­வல் தடுப்பு நட­வ­டிக்­கை­கள் தீவி­ரப்­ப­டுத்­தப்­பட வேண்­டும் என்று மத்­திய சுகா­தா­ரத்­துறை அமைச்­சர் மன்­சுக் மாண்­ட­வி­யா­வுக்கு பிர­த­மர் மோடி உத்­தர விட்­டுள்­ளார்.

இதை­ய­டுத்து, மாநில அர­சு­க­ளைத் தொடர்பு கொண்டு ஆலோ­சனை மேற்­கொண்ட அமைச்­சர் மன்­சுக் மாண்­ட­வியா, கொரோனா அலை ஏற்­பட்­டால் அதை எதிர்­கொள்­ளத் தேவை­யான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளு­மாறு அறி­வு­றுத்தி உள்­ளார்.

இம்­முறை புதிய அலை உரு­வா­னா­லும் உயி­ரி­ழப்பு, மருத்­து­வ­மனை­யில் அனு­ம­திக்­கப்­ப­டு­வோர் எண்­ணிக்கை மிகக் குறை­வாக இருக்­கும் என சுகா­தார நிபு­ர­ணர்­கள் கணித்­துள்­ள­னர்.

"மருத்­துவ உயிர் வாயு உரு­ளை­கள், கொரோனா மருந்­து­கள் தேவை­யான அள­வில் இருப்­பதை உறுதி செய்ய வேண்­டும். தனி­மைப்­ப­டுத்­தும் நட­வ­டிக்­கைக்­கான ஏற்­பா­டு­களை தீவி­ரப்­ப­டுத்த வேண்­டும்," என மாநி­லங்­க­ளுக்கு சுகா­தார அமைச்­சர் மன்­சுக் மாண்­ட­வியா அறி­வுரை வழங்கி உள்­ள­தாக ஊட­கத் தக­வல் தெரி­விக்­கிறது.

இதற்­கி­டையே, பல்­வேறு நாடு­களில் இருந்து இந்­தி­யா­வுக்கு வந்த 39 பேருக்கு கொரோனா தொற்று இருப்­பது உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது. அவர்­க­ளுக்கு உரு­மா­றிய கொரோனா பாதிப்பு உள்­ளதா என்­பதை உறுதி செய்ய மேல­திக பரி­சோ­த­னைக்கு உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லை­யில், நாடு முழு­வ­தும் கடந்த 24 மணி நேரத்­தில் 268 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்­பது உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.

மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெறு­வோர் எண்­ணிக்கை 3,552ஆக அதி­க­ரித்­தது.