ரயில்வே துறைக்கு பெரும் நிதி ஒதுக்கீடு

ரயில்வே துறைக்கு பெரும் நிதி ஒதுக்கீடு

2 mins read
204e6880-dca8-4ccb-aa11-6b62767b29cc
-

கோல்­கத்தா: ரயில்வே துறையை நவீ­ன­ம­ய­மாக்­கு­வ­தற்­காக பெரு­மளவு நிதி ஒதுக்­கீடு செய்­யப்­பட்டு, பணி­கள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­வ­தாக இந்­தி­யப் பிர­த­மர் நரேந்­திர மோடி தெரி­வித்­தார்.

மேற்கு வங்­கத்­தில் ஹவுரா-நியூ ஜல்­பை­குரி இடை­யி­லான வந்தே பாரத் ரயில் சேவை உள்­ளிட்ட பல்­வேறு திட்­டங்­க­ளின் தொடக்க நிகழ்ச்­சி­யில் வெள்­ளிக்­கி­ழ­மை­யன்று பிர­தமா் நரேந்திர மோடி நேரில் பங்­கேற்­­ப­தாக இருந்­தார்.

ஆனால், தனது தாயாா் ஹீரா­பென் மறை­வைத் தொடா்ந்து, குஜ­ராத்­துக்கு சென்­றார் மோடி. அங்கு தாயின் உடல் தக­னம் செய்­யப்­பட்­ட­வு­டன், அக­ம­தா­பாத்­தில் இருந்­த­வாறே, காணொளி வாயி­லாக 'வந்தே பாரத்' ரயில் சேவை, இதர திட்­டங்­களை தொடக்கி வைத்தாா்.

அப்­போது பேசிய மோடி, "தற்­போ­தைய 21ஆம் நூற்­றாண்­டில், நாட்­டின் விரை­வான வளா்ச்­சிக்கு ரயில்வே துறையின் மேம்­பாடு, சீா்திருத்­தங்­கள் மிக அவ­சி­யம். அத­ன­டிப்­ப­டை­யில், நாடு முழு­வ­தும் ரயில்­வே­யில் மாற்­றங்­களை புகுத்த நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

"மக்­க­ளுக்குத் தடை­யற்ற போக்­கு­வ­ரத்தை உறுதி செய்­வ­தற்­காக, புதிய விமான நிலை­யங்­கள், நீா்வழிப்­பா­தை­கள், துறை­மு­கங்­கள், சாலை­கள் அமைக்­கப்­பட்டு வரு­கின்­றன," என்­றார் அவர்.

மேடை ஏற மறுத்த மம்தா

இந்­நி­கழ்ச்­சி­யில் கலந்­து­கொண்ட பாஜக தொண்­டர்­கள் 'ஜெய் ஸ்ரீராம்' என முழக்­க­மிட்­ட­தால் மேற்கு வங்க முதல்­வர் மம்தா பானர்ஜி எரிச்­ச­ல­டைந்­தார். ஆளு­நர் ஆனந்த போஸ், ரயில்வே அமைச்­சர் அஸ்­வினி வைஷ்­ணவ் எவ்­வ­ளவோ சமா­தா­ன­ப­டுத்­தி­யும் வற்­பு­றுத்­தி­யும் மம்தா மேடை ஏற மறுத்­து­விட்­டார்.

பார்­வை­யா­ளர்­கள் வரி­சை­யில் இருந்­த­ப­டியே பேசிய மம்தா, பிர­த­ம­ரு­டைய தாயின் மறை­வுக்கு இரங்­கல் தெரி­வித்­தார். தாயின் இழப்பு நேர்ந்­தி­ருந்த நேரத்­தி­லும் ஒப்­புக் கொண்ட நிகழ்ச்­சி­யில் தவ­றா­மல் பங்­கேற்­ற­தற்­காக, பிர­த­மர் மோடிக்கு நன்­றி­யை­யும் பாராட்­டை­யும் தெரி­வித்த அவர், மோடியை சற்று ஒய்வு எடுத்­துக்­கொள்­ளு­மா­றும் கூறி­னார்.