புதுடெல்லி: தேர்தல் அறக்கட்டளைகள் மூலம் 2021-22 நிதியாண்டில் அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்ட நன்கொடை குறித்த அறிக்கையை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆர்) வெளியிட்டுள்ளது.
அதன்படி 89 கார்ப்பரேட், வணிக நிறுவனங்கள், 40 தனிநபர்கள் மொத்தமாக ரூ.487 கோடியை ஆறு தேர்தல் அறக்கட்டளைகளுக்கு நன்கொடையாக அளித்துள்ளன.
பாஜகவுக்கு மட்டும் ரூ.351.50 கோடி (72.17 விழுக்காடு) வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு அடுத்து, கே.சந்திரசேகரராவின் பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) கட்சி ரூ.40 கோடி பெற்றுள்ளது. அடுத்தடுத்த இடங்களில், சமாஜ்வாடி ரூ.27 கோடி, ஆம் ஆத்மி ரூ.21.12 கோடி, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ரூ.20 கோடியும் பெற்றுள்ளன. இந்தக் கட்சிகள் பெற்ற நன்கொடையைவிடவும் குறைவாக காங்கிரஸ் ரூ.18.44 கோடியை பெற்றுள்ளது.

