'ரி‌ஷப் அபாயக் கட்டத்தைக் கடந்துவிட்டார்'

'ரி‌ஷப் அபாயக் கட்டத்தைக் கடந்துவிட்டார்'

2 mins read
74b00423-f730-4f20-8291-2a87d0b987ca
-
multi-img1 of 2

புது­டெல்லி: கார் விபத்­தில் சிக்கி படு­கா­ய­ம­டைந்­துள்ள இந்­திய கிரிக்­கெட் வீரர் ரி‌ஷப் பன்ட் அபா­யக் கட்­டத்­தைத் தாண்­டி­­விட்­ட­தா­க­வும் மேலும் சில பரி­சோ­த­னை­கள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­வ­தா­க­வும் மருத்­து­வ­மனை வட்­டா­ரத் தக­வல்­கள் கூறு­கின்­றன.

நேற்று முன்­தி­னம் காலை 5.30 மணி அள­வில், டெல்லி - டேரா­டூன் தேசிய நெடுஞ்­சா­லை­யில் ரிஷப் பன்ட் காரில் சென்று கொண்­டி­ருந்­த­போது சாலைத் தடுப்­பில் மோதி கார் தீப்­பற்றி எரிந்­தது.

அந்த வழி­யாக சென்­ற­வர்­கள் உட­ன­டி­யாக அவரை மீட்டு மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­தித்­த­னர். முத­லில், சக்ஷாம் மருத்­து­வ­மனை­யில் அனு­ம­திக்­கப்­பட்ட அவர், பின்­னர் அங்­கி­ருந்து டேரா­டூன் பகு­தி­யில் உள்ள மேக்ஸ் மருத்து­வ­ம­னைக்கு மாற்­றப்­பட்­டார்.

அங்கு அவ­ரது மூளை, முது­குத்­தண்டு பகு­தி­களில் எம்­ஆர்ஐ ஸ்கேன் மேற்­கொள்­ளப்­பட்­டது. அந்த உறுப்­பு­கள் சீராக உள்ளதைப் பரி­சோ­தனை முடி­வு­கள் காட்­டு­வ­தாக மருத்­து­வ­மனை வட்டா­ரத் தக­வல்­கள் கூறின.

அவ­ருக்கு நெற்­றி­யில் இரண்டு இடங்­களில் வெட்­டுக் காயம் ஏற்­பட்­டுள்­ளது. வலது கால் மூட்­டில் தசை­நார் கிழிந்­துள்­ளது. அவ­ரது வலது மணிக்­கட்டு, கணுக்­கால், கால் விர­லி­லும் காயம் ஏற்­பட்­டுள்­ளது. முது­கில் சிராய்ப்பு காயங்­கள் ஏற்­பட்­டுள்­ளது என பிசி­சிஐ தெரி­வித்­துள்­ளது.

அவர் விரைந்து குணம் பெற வேண்டி சக விளை­யாட்டு வீரர்­கள், பயிற்­சி­யா­ளர்­கள் மற்­றும் அர­சி­யல் பிர­மு­கர்­கள் என பல­ரும் தெரி­வித்து வரு­கின்­ற­னர்.

இந்­தி­யப் பிர­த­மர் நரேந்­திர மோடி­யும் ரி‌ஷப் பண்ட்­டின் தாயாரைத் தொலை­பே­சி­யில் தொடர்பு கொண்டு நலம் விசா­ரித்து, ஆறு­தல் கூறி­னார்.

காப்பாற்றியவர்களுக்குப் பாராட்டு

இதற்­கி­டையே, பண்ட்டை விபத்­தில் இருந்து காப்­பாற்­றிய ஹரி­யானா போக்­கு­வ­ரத்து கழ­கத்­தின் பானி­பட் டெப்­போ­வுக்கு உட்­பட்ட பேருந்து ஓட்­டு­னர் சுஷில் குமார், நடத்­து­னர் பரம்­ஜீத் ஆகிய இரு­வ­ரும் போக்­கு­வ­ரத்துத் துறை சார்­பில் கௌர­விக்­கப்­பட்­ட­னர்.

மனித தன்­மை­யு­டன் செய­லாற்­றி­ய­தற்­காக, மாநில அர­சும் அவர்­களைக் கௌர­விக்­கும் என்று தகவல்கள் கூறுகின்றன.

செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய நடத்­து­ன­ரான பரம்­ஜீத், "விபத்­தில் சிக்­கி­ய­வ­ரைக் காப்­பாற்ற ஓடி சென்­றோம். நாங்­கள் அவரை (பண்ட்) காரில் இருந்து வெளியே இழுத்­த­வு­டன், 5 முதல் 7 வினா­டி­களில் கார் தீப்­பற்றி எரிந்­தது. அவ­ரது தனிப்­பட்ட விவ­ரங்­களைக் கேட்­ட­போது, அவர் ஒரு இந்­திய கிரிக்­கெட் வீரர் என்பது தெரிந்தது," என்று சொன்­னார்.

கிரிக்­கெட் பற்றி அதிகம் அறிந்திராத ஓட்­டு­னர் சுஷில் குமார் தனக்கு ரி‌ஷப் பன்ட் யார் என்­பதே தெரி­யாது எனக் கூறி­உள்­ளார்.