அண்டைநாடுகளுக்கு அமைச்சர் ஜெய்சங்கர் மறைமுக எச்சரிக்கை

அண்டைநாடுகளுக்கு அமைச்சர் ஜெய்சங்கர் மறைமுக எச்சரிக்கை

2 mins read
6a5359f7-7bed-4aa8-a511-355d3639e8e6
-

நிகோ­சியா: பயங்­க­ர­வா­தத்­தின் மூலம் இந்­தி­யாவை ஒரு போதும் பேச்­சு­வார்த்­தைக்­குக் கட்­டா­யப்­ப­டுத்த முடி­யாது என்று இந்­திய வெளி­யு­ற­வுத்­துறை அமைச்­சர் எஸ்.ஜெய்­சங்­கர் அண்டை நாடு­களுக்கு மறை­முக எச்­ச­ரிக்கை விடுத்­தார்.

சைப்­ரஸ் நாட்­டில் வாழும் புலம்­பெ­யர்ந்த இந்­தி­யர்­க­ளி­டம் பேசிய வெளி­யு­ற­வுத்­துறை அமைச்­சர் ஜெய்­சங்­கர், "பயங்­க­ர­வா­தத்­தின் மூல­மாக யாரும் இந்­தி­யா­வைப் பேச்­சு­வார்த்­தைக்கு கட்­டா­யப்­ப­டுத்த முடி­யாது. அதனை ஏற்­றுக்­கொள்­ள­வும் முடி­யாது.

"இந்­தியா அனை­வ­ரு­ட­னும் சுமூ­க­மான உற­வைப் பேணு­வ­தற்கே விரும்­பு­கிறது. ஆனால், சுமூ­க­மான உறவு என்­ப­தற்கு மன்­னித்­துக் கொண்டே இருப்­பது அல்­லது விலகி நின்று பயங்­க­ர­வா­தத்தை வேடிக்கை பார்ப்­பது என்று அர்த்­தம் கிடை­யாது.

"இரண்­டா­வது, எல்லை பிரச்­சினை. எல்லை விவ­கா­ரத்­தில் இந்­தியா - சீனா உறவு சுமு­க­மாக இல்லை என்­பதை அனை­வ­ரும் அறி­வார்­கள்.

"தன்­னிச்­சை­யாக எல்­லைக் கட்­டுப்­பாடு கோட்டை மாற்றி அமைப்­ப­தற்கு இந்­தியா உடன்­படவில்லை என்­ப­தால் அதில் பெரும் சிக்­கல் உரு­வாகி இருக்­கிறது.

"சமா­தா­னத்தை விரும்­பும் நாடாக இந்­தி­யா­விற்கு பல எதிர்­பார்ப்­பு­கள் இருக்­கின்­றன. இந்­தியா தற்­போது சுதந்­தி­ர­மான பொரு­ளா­தார பலம் மிக்க நாடாக பார்க்­கப்­ப­டு­கிறது," என்­றார் அவர்.

இந்­தியா சைப­ர­ஸூ­டன், பாது­காப்பு நட­வ­டிக்­கை­களில் ஒத்­து­ழைப்பு, இரு­நா­டு­க­ளுக்­கி­டையே மக்­கள் புலம்­பெ­யர்­வதை எளி­தாக்­கும் ஒப்­பந்­தம் மற்­றும் சர்­வ­தேச சோலார் ஒத்­து­ழைப்பு என 3 ஒப்­பந்­தங்­கள் மேற்­கொள்ள பேச்­சு­வார்த்தை நடத்தி வரு­கிறது.

இதற்­கி­டையே, இந்­தி­யா­வின் கேர­ளா­வில் நடந்த நிகழ்ச்சி ஒன்­றில் பேசிய பாது­காப்­புத் துறை அமைச்­சர் ராஜ்­நாத் சிங், இந்­தியா அண்டை நாடு­க­ளு­டன் நட்­பு­ற­வாக இருப்­ப­தையே விரும்­பு­வ­தா­க­வும் அதற்­காக இந்­தி­யா­வின் பாது­காப்பு விஷ­யத்­தில் எந்த ஒரு சம­ர­ச­மும் செய்ய முடி­யாது எனத் தெரி­வித்­துள்­ளார்.