டெல்லி விபத்து: தோழியின் பேட்டியால் எழும் சந்தேகங்கள்

டெல்லி விபத்து: தோழியின் பேட்டியால் எழும் சந்தேகங்கள்

1 mins read
e9608a0f-0e84-4718-a07f-698a26f50c5c
-

புது­டெல்லி: விபத்­தில் சிக்கி இறந்த இளம்­பெண் அஞ்­ச­லி­யின் உடல் பல கிலோ மீட்­டர் தூரம் காரில் இழுத்­துச் செல்­லப்­பட்டது குறித்து, அப்­பெண்­ணின் தோழி நிதி அளித்த பேட்டி பல்­வேறு சந்­தே­கங்­களை எழுப்பி உள்­ளது.

அஞ்­சலி மது அருந்தி இருந்­த­தால், வாக­னத்தை ஓட்ட வேண்­டாம் என்­றும் தாம் கூறி­ய­தாக நிதி தெரி­வித்­துள்­ளார்.

"அஞ்­சலி காரில் இழுத்­துச் செல்­லப்­ப­டு­வ­தைப் பார்த்­தும் என்­னால் அதைத் தடுக்க முடி­ய­வில்லை. அத­னால் அச்­சத்­தில் வீடு திரும்பிய பின் அழுது கொண்டே இருந்­தேன்," என்று நிதி கூறி­யுள்­ளார்.

ஆனால் தன் தோழி­யைக் காப்­பாற்ற முயற்சி செய்­யாத பெண்­ணின் வாக்­கு­மூ­லத்தை எவ்­வாறு நம்ப முடி­யும் என தேசிய மக­ளிர் ஆணை­யம் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்­ளது.