தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இணையம் வழி சேவல் சண்டை நடத்த திட்டம்: ரூ.1,000 கோடி வரை பந்தயம் கட்ட ஏற்பாடு

1 mins read
6d485554-2086-4cc0-8a10-1e83aca32d82
-

திருப்­பதி: ஆந்­திர மாநி­லத்­தின் கட­லோ­ரப் பகு­தி­க­ளான கிழக்கு கோதா­வரி, மேற்கு கோதா­வரி, கிருஷ்ணா, குண்­டூர் உள்­ளிட்ட மாவட்­டங்­களில் சேவல் சண்டை என்­பது மிக­வும் பிர­ப­ல­மான ஒரு விளை­யாட்­டாக இருந்து வரு கிறது.

ஆனால், இந்தச் சண்டையை நடத்­துவதற்கு ஆந்­திர அரசு தடை விதித்­துள்­ளது.

எனினும், சேவல் சண்­டைக்கு ரூ.1,000 கோடி வரை பந்­த­யம் கட்ட ஏற்­பா­டு­கள் நடந்து வரு­வ­தா­க­வும் தக­வல்­கள் குறிப்­பிட்­டுள்­ளன.

இந்­நி­லை­யில், இப்­போட்­டி­கள் விதி­மு­றை­களை மீறி எங்­கும் நடக்­கின்­ற­னவா என காவ­லர்­கள் கண்­கா­ணிப்பைத் தீவி­ரப்­ப­டுத்தி உள்­ள­னர்.

இந்­நி­லை­யில், இந்­தச் சேவல் சண்டை அமைப்­பைச் சேர்ந்­த­வர்­கள் 'சங்­க­ராந்தி' எனப்­படும் பொங்­கல் பண்­டிகை அன்று இப்­போட்­டியை இணை­யம் வழி நடத்­து­வ­தற்குத் திட்­டம் தீட்டி உள்­ள­னர்.

இதற்­காக வட இந்­திய சந்தை யைத் தேர்ந்­தெ­டுத்­துள்ள சேவல் சண்டை அமைப்­பா­ளர்­கள், குறுந்­த­க­வல், செயலி, நேரடி ஒளி­ப­ரப்பு, பணத்தை பந்­த­யம் கட்­டும் கூடங்க­ளுக்கு மாறி உள்­ள­னர்.

தற்­போது சேவல் சண்­டைக்­கான ஒத்­திகை பயிற்­சியை நடத்தி வரு­கின்­ற­னர். சூதாட்­டத்­தில் ஆர்­வ­முள்­ள­வர்­க­ளைக் கொண்டு ரக­சி­யக் குழுக்­களை உரு­வாக்கி, தங்­க­ளது ரக­சியக் குறி­யீட்டு எண்­களை சேவ­லின் பெயர்­க­ளுக்கு எதி­ராக பதி­விட ஏற்­பாடு நடந்து வருகிறது.

வெற்றிபெற்ற சேவல்­கள் மீது இணை­யம் வழி அமைப்­பா­ளர்­களின் வங்­கிக் கணக்­கில் பணம் கட்­டி­ய­வர்­க­ளுக்கு, சிறு தொகையைப் பிடித்துக்கொண்டு அவர்களது வங்­கிக் கணக்­கில் பந்தயப் பணம் திருப்பிச்செ­லுத்­தப்­படும் எனக் கூறப்­ப­ட்டுள்ளது.