வாஷிங்டன்: கடந்த ஓராண்டு காலகட்டத்தில் ஒரு லட்சத்து 25,000 இந்திய மாணவர்களுக்கு விசா வழங்கி அமெரிக்கா சாதனை படைத்துள்ளதாக அமெ ரிக்க வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் தெரிவித்துள்ளார்.
விசா பெறுவதற்கான காத்திருப்பு நேரத்தைக் குறைப்பதற்காக எச், எல் பணியாளர் விசா விண்ணப்பதாரர்களுக்கு 100,000 இடங்களை அமெரிக்கா திறந்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
பத்திரிகையாளர் சந்திப்பில், இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு விசாக்களை அனுமதிப்பதில் காலதாமதம் ஏற்படுவது ஏன் என நெட் பிரைசிடம் கேட்கப்பட்டது.
இதற்குப் பதிலளித்த அவர், "இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகமும் தூதரக அதிகாரிகளும் 2022ஆம் நிதியாண்டில் மட்டும் இதுவரை இல்லாத அளவில் மாணவர்களுக்கு விசா வழங்கி சாதனை படைத்துள்ளனர்.
"அதன்படி, ஏறக்குறைய 1.25 இந்திய மாணவர்களுக்கு விசா அனுமதி வழங்கி இருக்கிறோம்.
"ஒரு சில விண்ணப்பதாரர்களுக்கு நீட்டிக்கப்பட்ட விசாக்களைப் பெறுவதில் காலதாமதம் ஏற்படு வதை ஒப்புக்கொள்கிறோம். விசாக்களைப் பெறுவோருக்கான நேர்காணலுக்கான காத்திருப்பு நேரம் குறைவதற்காக நாங்கள் தொடர்ந்து முயற்சிகளை எடுத்து வருகிறோம்," என்றார்.
"இந்த முக்கியமான பணிகளைச் செய்ய நாங்கள் அமெரிக்க வெளிநாட்டு, சேவை பணியாளர்களைப் பணியமர்த்துவதை இரட்டிப்பாக்கியுள்ளோம். விசா செயலாக்கம் திட்டமிடப்பட்டதை விட வேகமாக மீண்டு வருகிறது," என்று நெட் பிரைஸ் கூறினார்.

