வேலையின்மை பிரச்சினை: மணப்பெண் கிடைப்பதில்லை

வேலையின்மை பிரச்சினை: மணப்பெண் கிடைப்பதில்லை

1 mins read
e668c09a-c605-4a66-8d02-31c38953e9c8
-

புனே: நாட்­டில் நில­வும் வேலை­யில்­லாத் திண்­டாட்­டம் தொடர்­பாக மத்­தி­யி­லும் மகா­ராஷ்­டி­ரத்­தி­லும் உள்ள பாஜக அர­சு­களை விமர்­சித்­துள்ள தேசி­ய­வாத காங்­கி­ரஸ் தலை­வர் சரத் பவார், திரு­மண வயது இளை­ஞர்­களுக்கு மண­ம­கள் கிடைக்­கா­த­தால் சமூ­கப் பிரச்­சி­னை­களை உரு­வாக்கி வரு­வ­தா­கக் கூறி­உள்ளார்.

புனே­யில் ஒரு நிகழ்வில் பேசிய அவர், "இன்­றைக்கு கிரா­மங்­களில் பொது இடங்­களில் 20 முதல் 30 வய­துக்­குட்­பட்ட 15 முதல் 20 இளை­ஞர்­கள் வேலை­யில்­லா­மல் உட்­கார்ந்­தி­ருப்­ப­தைப் பார்க்க முடி­கிறது. என்ன செய்­கி­றீர்­கள் என்று கேட்­டால் சிலர், `பட்­டப் ­ப­டிப்பு', `முது­கலைப்­பட்­டம்' படித்திருப்பதாகச் சொல்­கின்­ற­னர். திரு­ம­ண­மாக வில்லை என்­கின்­ற­னர். ஏன் திரு­ம­ணம் செய்­ய­வில்லை என்று கேட்­டால், "வேலை இல்லை என்­ப­தால் பெண் கொடுக்க மறுக்­கின்­ற­னர் என்­கின்­ற­னர். இந்­தப் புகார்­கள் கிரா­மங்­களில் அதி­க­மா­கக் காணப்­ப­டு­கிறது," என்று கூறினார்.