தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மைசூரு சாமுண்டி மலையில் குஜராத் சுற்றுலாப் பேருந்து தீப்பிடித்து எரிந்தது

1 mins read
13c8ee6e-b62a-4fa3-a5cf-89ba44b56f6e
படம்: பிக்ஸாபே -

மைசூரு: மைசூரு சாமுண்டி மலை­யில் குஜ­ராத் சுற்­றுலா பஸ் தீப்­பி­டித்து எரிந்­தது. 50 பேர் அதிர்ஷ்­ட­வ­ச­மாக உயிர் தப்­பி­னர்.

கர்­நா­டக மாநி­லத்­தின் புகழ்­பெற்ற சுற்­று­லாத் தலம் மைசூர். வெளி நாடு­களில் இருந்­தும் வெளி மாநி­லங்­களில் இருந்­தும் ஏரா­ள­மான சுற்­று­லாப் பய­ணி­கள் இங்கு வரு­வ­துண்டு. இந்­நி­லை­யில் குஜ­ராத் மாநி­லத்­தில் இருந்து 50 பேர், ஒரு பேருந்­தில் மைசூ­ருக்கு வந்­த­னர். அவர்­கள் வெள்­ளிக்­கி­ழமை அதி­காலை சாமுண்டி மலைக்­குப் பேருந்தில் சென்­று­கொண்­டி­ருந்­த­னர். அப்­போது தீடி­ரென பேருந்­தில் கறும்­புகை வெளி­யா­னது. அதைக் கண்ட ஓட்­டு­நர் முன்­னெச்­ச­ரிக்­கை­யாக பேருந்தை ஓர­மாக நிறுத்­தி­விட்டு, பய­ணி­களை அவ­சர அவ­ச­ர­மாக தரை­யி­றங்­கச் செய்­தார்.

பய­ணி­கள் அனை­வ­ரும் தரை­யி­றங்­கி­ய­தும் பேருந்து தீப்­பற்றி எரி­யத் தொடங்­கி­யது. ஓட்­டு­ந­ரின் சுதா­ரிப்­பால் ஐம்­பது பேரின் உயிர் காக்­கப்­பட்­டது.

பின்­னர் அங்கு வந்த தீய­ணைப்­புப் படை­யி­னர், தண்­ணீ­ரைப் பீய்ச்சி அடித்து தீயை அணைத்­த­னர். ஆனால், பேருந்­தின் ஒரு பகுதி முழு­மை­யாக எரிந்­து­போய்­விட்­டது.

பேருந்­தில் டீசல் கசிவு கார­ண­மாக தீப்­பி­டித்­தது என்று முதல் கட்ட விசா­ர­ணை­யில் தெரி­ய­வந்­துள்­ள­தாக காவல்­து­றை­யி­னர் தெரி­வித்­த­னர்.