ஜோஷிமத் நில வெடிப்பில் பாதிக்கப்பட்ட கட்டடங்களை இடிக்கும் பணி தொடக்கம்

ஜோஷிமத் நில வெடிப்பில் பாதிக்கப்பட்ட கட்டடங்களை இடிக்கும் பணி தொடக்கம்

1 mins read
36bf83f4-562f-4bac-99c5-7a3b9329ee01
-

ஜோஷி­மத்: உத்­த­ரா­கண்ட் மா நிலத்­தில் நில­வெ­டிப்­பால் பாதிக்­கப்­பட்­டுள்ள ஜோஷி­மத் நக­ரத்­தில் அதி­கம் வெடிப்­பு­க­ளால் பாதிக்­கப்­பட்­டுள்ள வீடு­கள், ஹோட்­டல்­களை இடிக்­கும் பணி நேற்று தொடங்­கி­ய­தாக அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

தொடர் நில­வெ­டிப்­பு­க­ளால் மக்­கள் அங்கு வசிக்க முடி­யாத நிலை ஏற்­பட்­டுள்­ளது.

நிலவெடிப்பும் நிலச்சரிவும் அதிகரிக்கும் நிலையில் அந்­ந­க­ரம் ஆபத்­தான பகுதி, ஆபத்து உரு­வா­கும் பகுதி, முற்­றி­லும் பாது­காப்­பான பகுதி என மூன்றாகப் பிரிக்­கப்­பட்டுள்­ளது.

மண்­ணில் புதைந்­து­வ­ரும் ஜோஷி­மத் நக­ரில், 600 கட்­ட­டங்­களில் விரி­சல்­கள் அதி­க­ரித்து வரு­கின்­றன. அவற்­றில் அதி­கம் பாதிக்­கப்­பட்ட கட்­ட­டங்­கள் இடிக்­கப்­ப­டு­வ­தாக அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

மத்­திய கட்­டட ஆராய்ச்சி நிறு­வன வல்­லு­நர்­க­ளின் மேற்­பார்­வை­யில் நடக்­கும் இப்­ப­ணி­யில் தேசி­யப் பேரி­டர் மீட்­புப் படை­யி­னர் கைகொ­டுப்­பர்.

மொத்­தம் 678 கட்­ட­டங்­களில் விரி­சல் கண்­ட­றி­யப்­பட்ட நிலை­யில், 81 குடும்­பங்­க­ளைச் சேர்ந்­தோர் நிவா­ரண நிலை­யங்­களில் தஞ்­சம் புகுந்­துள்­ள­னர். நாலா­யி­ரத்­துக்கு மேற்­பட்­டோர் வெளி­யேற்­றப்­பட்­டுள்­ள­னர். அவர்­க­ளுக்கு உணவு, தண்­ணீர், போர்­வை­கள் போன்ற நிவா­ர­ணப் பொருள்­கள் வழங்­கப்­பட்­டுள்­ளன.

ஜோஷி­மத் நக­ரம் 2.5 சதுர கிலோ­மீட்­டர் பரப்­ப­ளவு கொண்­டது.

அதி­க­மான கட்­டு­மா­னப் பணி­கள், நக­ர­ம­ய­மாக்­கல் திட்­டங்­கள், நாள்­தோ­றும் அதி­க­ரித்து வரும் சுற்­று­லாப் பய­ணி­க­ளின் எண்­ணிக்கை ஆகி­ய­வற்­றால் அது புதை­யுண்டு வரு­வ­தா­கக் கூறப்­படு­கிறது.

அந்த வட்­டா­ரத்­தில் புதி­ய கட்டு­மானப் பணி­களுக்குத் தடை விதிக்­கப்­பட்டு உள்­ளது.

இதற்­கி­டையே, அரு­கி­லுள்ள கர்­ண­பி­ர­யாக் நக­ரி­லும் அதைச் சுற்­றி­யுள்ள கிரா­மங்­க­ளி­லும் சில வீடு­களில் விரி­சல் ஏற்­ப­டத் தொடங்­கி­யுள்­ள­தாக அப்­ப­குதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் தெரி­வித்­துள்­ளார்.