செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
57c3b71c-1544-43de-a001-c7cbc87d9822
-

சுரங்கம் அமைத்து ஊடுருவல்; ஆளில்லா வானூர்தி மூலம் சோதனை

புதுடெல்லி: பாகிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் சுரங்கங்கள் அமைத்து தீவிரவாதிகள் ஊடுருவுவதைத் தடுக்கும் பணியில் எல்லைப் பாதுகாப்புப் படை ஈடுபட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் இத்தகைய ஐந்து சுரங்கங்கள் அழிக்கப்பட்ட நிலையில், பூமிக்கடியில் உள்ளவற்றை ஆய்வு செய்யும் 'ரேடார்' கருவிகளை ஆளில்லா வானூர்தியில் பொருத்தி கண்காணிப்புப் பணி மேற்கொள்ளப்படுகிறது.

காப்பீட்டுத் தொகைக்காக இளையரைக் கொன்ற நால்வர் கைது

திருப்பதி: ஆந்திரப் பிரதேச மாநிலம் பாச்சுப்பள்ளி என்ற இடத்தில் போலி நிறுவனத்தை நடத்தினார் ஸ்ரீகாந்த். தன்னிடம் வேலைகேட்ட பிட்சாபதி எனும் ஆதரவற்ற இளையர் பெயரில் ரூ.50 லட்சம் காப்பீடு செய்த அவர், மூவரின் உதவியுடன் பிட்சாபதியைக் கொலை செய்தார். பின்னர் காப்பீட்டுத் தொகைக்கு விண்ணப்பம் செய்தார். காப்பீட்டு நிறுவனம் சந்தேகப்பட்டு காவல்துறையிடம் புகாரளிக்கவே கண்காணிப்பு கேமராப் பதிவுகள் மூலம் கொலை செய்த நால்வரும், ஓராண்டுக்குப்பின் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பள்ளி வழங்கிய மதிய உணவில் பாம்பு

கோல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் பீர்பூம் வட்டாரத் தொடக்கப்பள்ளி ஒன்றில் நேற்று முன்தினம் வழங்கப்பட்ட மதிய உணவில் பாம்பு காணப்பட்டதாகவும் (படம்: என்டிடிவி) அதையடுத்து 30க்கு மேற்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். ஒரு மாணவரைத் தவிர மற்றவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அந்த மாணவரும் அபாயக் கட்டத்தைக் கடந்துவிட்டார்.

தூண் விழுந்து தாய், சேய் பலி

பெங்­க­ளூர்: கர்­நா­டக மாநி­லத் தலை­ந­கர் பெங்­க­ளூ­ரின் நாக­வரா பகு­தி­யில் மெட்ரோ ரெயில் பாதை அமைக்­கும் பணி நடை­பெற்று வரு­கிறது. நேற்­றுக் காலை 11 மணி அள­வில் மெட்ரோ ரயில் பாதைக்­கா­கக் கட்­டப்­பட்ட தூண் ஒன்று இடிந்து சாலை­யில் விழுந்­த­தில் மோட்­டார் சைக்­கி­ளில் சென்­று­கொண்­டி­ருந்த மூவர் கீழே விழுந்­த­னர். சம்­ப­வத்­தில் பலத்த காயம் அடைந்த கண­வன், மனைவி, அவர்­க­ளது இரண்டு வயது மகன் மூவ­ரை­யும் அங்­கி­ருந்­த­வர்­கள் மீட்டு, மருத்­து­வ­ம­னைக்கு எடுத்­துச்­சென்­ற­னர். மூவ­ருக்­கும் தீவிர சிகிச்சை அளிக்­கப்­பட்­டது. ஆனால் சிகிச்சை பல­னின்றி தாயும் அவரது இரண்டு வய­துக் குழந்­தை­யும் உயி­ரி­ழந்­தனர்.