தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

$100 பில்லியன் அனுப்பிய வெளிநாடுவாழ் இந்தியர்கள்

2 mins read
fc569326-f7ba-46dc-ae72-123c1e28d7d2
-

இந்­தூர்: வெளி­நாடு வாழ் இந்தி­யர்­கள்­தான் நாட்­டின் உண்­மை­யான தூதர்­கள் என்று நிதி­ அமைச்­சர் நிர்­மலா சீதா­ரா­மன் தெரி­வித்­துள்­ளார்.

கடந்த 2022ஆம் ஆண்­டில் மட்­டும் வெளி­நாடு வாழ் இந்­தி­யர்­கள் தாய்­நாட்­டுக்கு அனுப்பி வைத்த தொகை சுமார் நூறு பில்­லி­யன் டால­ராக அதி­க­ரித்­துள்­ளது என்று இந்­தூ­ரில் நடை­பெற்ற பிர­வாசி பார­திய திவாஸ் எனப்­படும் வெளி­நாடு வாழ் இந்தி­யர்­கள் தின மாநாட்­டில் பேசும்­போது அவர் குறிப்­பிட்­டார்.

இந்­தத் தொகை­யா­னது முந்தைய ஆண்­டை­விட சுமார் 12 விழுக்­காடு அதி­கம் என்று அவர் சுட்­டிக்­காட்­டி­னார்.

வெளி­நாடு வாழ் இந்­தி­யர்­கள் இந்­தி­யா­வில் தயா­ரிக்­கப்­பட்ட பொருள்­க­ளை­யும் இந்­தி­யா­வில் வழங்­கப்­படும் பல்­வேறு சேவை­களை­யும் பயன்­ப­டுத்த வேண்­டும் என்று வேண்­டு­கோள் விடுத்த நிதி­ய­மைச்­சர், இதன் மூலம் அவை உல­க­ள­வில் பிர­ப­ல­மடை­யும் என்­றும் புதிய வர்த்­தக வாய்ப்­பு­கள் உரு­வா­கும் என்­றும் கூறி­னார்.

"கொரோனா நெருக்­க­டிக்­குப் பிற­கான ஓராண்டு காலத்­தில் தாய­கம் திரும்­பிய இந்­தி­யத் தொழி­லா­ளர்­கள் மீண்­டும் வெளி­நா­டு­க­ளுக்­குச் செல்ல மாட்­டார்கள் எனக் கரு­தப்­பட்ட நிலை­யில், ஏரா­ள­மான இந்­தியர்­கள் பய­னுள்ள பணி­க­ளின் நிமித்­தம் வெளி­நா­டு­க­ளுக்குச் சென்­ற­து­டன் அல்­லா­மல், ஓராண்டுக்­குள் இந்­தி­யா­வுக்கு அவர்­கள் அனுப்­பும் தொகை­யும் 12% அளவு அதி­க­ரித்­துள்­ளது.

"தக­வல் தொழில்­நுட்­பம், மின்­னி­லக்கத் தொழில்­நுட்­பம் உள்­ளிட்ட பல்­வேறு துறைகளில் நிபுணத்­து­வம் வாய்ந்த இந்தியர்­க­ளின் ஆதிக்­கம் அதி­க­ரித்­துள்­ளது.

"இதன் மூலம் அறி­வாற்­றல், முன்­னேற்­றத்­தின் உல­க­ளாவிய மைய­மாக இந்­தியா மாறி வருகிறது," என்­றார் அமைச்­சர் நிர்­மலா சீதா­ரா­மன்.

இந்­தி­யா­வில் உள்ள சிறு, குறு நடுத்­தர தொழில் நிறு­வனங்­களுக்கு ஆத­ர­வு அளிக்­கும் வகை­யில் வெளி­நாடு வாழ் இந்தி­யர்­கள் செயல்­பட வேண்­டும் என்­றும் கேட்­டுக்­கொண்ட அவர், சீனா, ஐரோப்­பிய ஒன்றி­யத்­துக்கு அப்­பாற்­பட்டு, பன்னாட்டு நிறு­வ­னங்­கள் இந்­தி­யா­வி­லும் தங்­க­ளு­டைய தொழிற்­சா­லைகளை நிறு­வ­லாம் என்ற கருத்தை இந்­திய அரசு வலு­வாக முன்­னி­றுத்­து­வ­தா­கக் குறிப்­பிட்­டார்.

அடுத்த 25 ஆண்­டு­களில் கட்­ட­மைப்பு, முத­லீடு, புத்­தாக்­கம், ஒருங்­கி­ணைப்பு ஆகிய நான்கு அம்சங்களில் இந்­தியா கவ­னம் செலுத்த உள்­ள­தா­க­வும் நிதி­ அமைச்­சர் கூறி­னார்.

இதற்­கி­டையே, வெளி­நாடு­வாழ் இந்­தி­யா்­கள் ஒருங்­கி­ணைந்து செயல்­பட வேண்­டும் என அதி­பர் திரௌ­பதி முர்மு தெரி­வித்­துள்­ளார்.

இந்­தூர் மாநாட்­டில் பேசிய அவர், வெளி­நா­டு­ வாழ் இந்­தி­யா்­கள் பல்­வேறு துறை­களில் கடி­ன­மாக உழைத்து முன்­னேறி உள்­ள­தா­கப் பாராட்­டி­னார்.

அனைத்­து­லக அரங்­கில் வெளி­நாடு வாழ் இந்­தி­யா்­கள் முக்­கி­யத்­து­வம் உள்ள தனித்­துவ இடத்­தைப் பெற்­றுள்­ளனா் என்­றும் உல­கின் ஒவ்­வொரு பகுதி­யி­லும் துடிப்­பு­மிக்க, நம்­பிக்கை கொண்ட இந்­திய சமூ­கம் உரு­வாகி வரு­கிறது என்­றும் அதி­பர் திரௌ­பதி முர்மு கூறி­னார்.

"கலை, இலக்­கி­யம், அர­சி­யல், தொழில்­துறை, கல்வி கற்­பித்­தல், தக­வல் தொழில்­நுட்­பம் உள்­ளிட்ட பல்­வேறு துறை­களில் வெளி­நா­டு­வாழ் இந்­தி­யா்­கள் நிபு­ணத்­து­வம் பெற்­ற­வா்­களா­கத் திகழ்­கின்­றனா்.

"பல்­வேறு சவால்­க­ளைத் திறம்­பட எதிா்கொண்டு அவா்கள் வெற்றி பெற்­றுள்­ள­னர்," என்­றார் அதி­பர் திரௌ­பதி முர்மு.