மிசோரம் மாநிலத்தில் குவியும் அகதிகள்

மிசோரம் மாநிலத்தில் குவியும் அகதிகள்

2 mins read
c7b955e5-40c3-43c7-bf25-a737a764d211
-

ஐசா­வல்: மிசோ­ரம் மாநி­லத்­தில் பங்­ளா­தேஷ், மியன்மார் நாடு­களைச் சேர்ந்த ஆயி­ரக்­க­ணக்­கா­னோர் அக­தி­க­ளா­கக் குவிந்து வரு­வ­தாக ஊட­கச் செய்­தி­கள் தெரி­விக்­கின்­றன.

மிசோ­ரம் இந்­தி­யா­வின் மிகச்­சி­றிய மாநி­லங்­களில் ஒன்று என்­ப­தால் அம்­மா­நில நிர்­வா­கத்­தால் குவிந்து வரும் அக­தி­க­ளுக்­குத் தேவை­யான உணவு, குடி­நீர், தங்­கு­மி­டம் ஆகி­ய­வற்­றுக்கு ஏற்­பாடு செய்ய முடி­ய­வில்லை எனத் தெரிய வந்­துள்­ளது.

வட­கி­ழக்கு மாநி­லங்­க­ளான மிசோ­ரம், மணிப்­பூ­ரில் 'குகி சின்' என்று குறிப்­பி­டப்­படும் பழங்­குடி இன மக்­கள் ஏரா­ள­மா­னோர் வசிக்­கின்­ற­னர்.

அண்டை நாடான பங்­ளா­தே­ஷில் சுமார் நாற்­பது லட்­சம் 'குகி சின்' பழங்­கு­டி­யின மக்­கள் வசிப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது. இதே­போல் மியன்மா­ரில் இந்த எண்­ணிக்கை நான்கு லட்­ச­மாக உள்­ளது.

இரு நாடு­க­ளி­லும் இப்­ப­ழங்­கு­டி­யின மக்­கள் பல்­வேறு அடக்­கு­முறை, பாதிப்­பு­களை எதிர்­கொண்­டுள்­ள­னர் என்­றும் ஊட­கங்­களில் தொடர்ந்து தக­வல்­கள் வெளி­யான வண்­ணம் உள்­ளன.

இதை­ய­டுத்து 'குகி சின்' பழங்­கு­டி­யின மக்­கள் பலர் எல்லை கடந்து இந்­தி­யா­வுக்கு அக­தி­க­ளாக வந்து சேர்­கின்­ற­னர்.

கடந்த இரண்டு ஆண்­டு­களில் மட்­டும் 40 ஆயி­ரம் பேர் மிசோ­ரம் மாநி­லத்­துக்­குள் அடைக்­க­லம் புகுந்­துள்­ள­னர் என்­றும் அவர்­க­ளுக்­காக 156 முகாம்­கள் அமைக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் அம்­மா­நில நிர்­வா­கம் கூறி­யுள்­ளது.

மேலும், ஏற்­கெ­னவே நிதிப் பற்­றாக்­கு­றையை எதிர்­கொண்­டுள்­ள­தால் அக­தி­கள் பரா­ம­ரிப்­பால் ஏற்­ப­டக்­கூ­டிய கூடு­தல் நிதிச்­சு­மை­யைச் சமா­ளிக்க இய­ல­வில்லை என மிசோ­ரம் அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

இதே­போல் பங்­ளா­தே­ஷில் இருந்­தும் நூற்­றுக்­க­ணக்­கான 'குகி சின்' பழங்­கு­டி­யின மக்­கள் அடைக்­க­லம் கோரி மிசோ­ரம் மாநி­லத்­துக்­குள் நுழைந்­துள்­ள­னர். அம்­மா­நில எல்­லை­யில் தற்­கா­லி­க­மாக முகா­மிட்­டுள்ள அவர்­கள் போது­மான உணவு, குடி­நீர் இன்றி அவ­திக்கு ஆளாகி உள்­ள­னர்.

அக­தி­கள் பலர் இந்­திய எல்­லை­யைக் கடக்க அங்­குள்ள இந்­திய பாது­காப்­புப் படை­யி­னர் அனு­மதி மறுப்­ப­தா­க­வும் இத­னால் சிலர் உயி­ரி­ழக்க நேரி­டு­வ­தா­க­வும் மிசோ­ரம் மாநி­லத்­தில் உள்ள 'குகி சின்' பழங்­கு­டி­யி­னத்­தைச் சேர்ந்த தலை­வர்­கள் கவலை தெரி­வித்­துள்­ள­னர்.