ஏடிஎம் மையத்தில் துப்பாக்கிச்சூடு: காவலாளி பலி; ரூ.8 லட்சம் ரொக்கப்பணம் கொள்ளை

ஏடிஎம் மையத்தில் துப்பாக்கிச்சூடு: காவலாளி பலி; ரூ.8 லட்சம் ரொக்கப்பணம் கொள்ளை

1 mins read
3931bcfc-6718-4bef-92c2-f74acb403c3a
-

புது­டெல்லி: ஏடி­எம் மையத்­தில் உள்ள பணம் வழங்­கும் தானி­யங்கி இயந்­தி­ரத்­துக்­குள் பணத்தை நிரப்ப வாக­னத்­தில் வந்­த­வர்­கள் மீது துப்­பாக்­கிச்­சூடு நடத்­தப்­பட்­டது.

இச்­சம்­ப­வத்­தில் காவ­லாளி ஒருவர் பலி­யான நிலை­யில், எட்டு லட்­சம் ரூபாய் கொள்ளை­ய­டிக்­கப்­பட்­டுள்­ளது.

டெல்­லி­யின் வசி­ரா­பாத் நக­ரில் தனி­யார் வங்­கி­யின் ஏடி­எம் மையம் இயங்கி வரு­கிறது. இம்­மை­யத்­தில் உள்ள தானி­யங்கி இயந்­தி­ரத்­தில் வழக்­க­மாக மாலை ஐந்து மணி­ய­ள­வில் பணம் நிரப்­பப்­படும்.

இதற்­காக நேற்று முன்­தி­னம் வங்கி சார்பில் ஊழி­யர்­களும் காவ­லாளி ஒரு­வ­ரும் அம்­மை­யத்­துக்கு வந்­த­னர். அப்­போது திடீரென இரு­சக்­கர வாகனத்தில் வந்த ஆடவர் ஒரு­வர் ஏடி­எம் மையத்தை நோக்கி துப்­பாக்­கி­யால் சுட்­டார். இதில் அங்­கி­ருந்த காவ­லாளி ரத்த வெள்­ளத்­தில் சரிந்து அங்கேயே உயி­ரி­ழந்­தார்.

வங்கி ஊழி­யர்­கள் அதிர்ச்­சி­யில் உறைந்து போன நிலை­யில், துப்­பாக்­கி­யால் சுட்ட அந்த ஆட­வர், ஏடி­எம் மையத்­தில் நிரப்­பு­வ­தற்­கா­கக் கொண்டு வரப்­பட்ட பணத்தை எடுத்­துக் கொண்டு கண்­ணி­மைக்­கும் நேரத்­தில் மாய­மா­னார்.

பாது­காப்பு அதி­க­முள்ள டெல்­லி­யில் நிகழ்ந்­துள்ள கொள்­ளைச் சம்­ப­வம் பொது­மக்­கள் மத்­தி­யில் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்தி உள்­ளது.