ஸ்ரீநகர்: கடந்த ஓராண்டில் மட்டும் காஷ்மீரில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 1,700 பேர் கைதாகி உள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளின்போது ரொக்கப் பணம், ஆயுதங்கள், வெடிபொருள்கள் பெருமளவில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காஷ்மீர் கூடுதல் காவல்துறை இயக்குநர் விஜய்குமார் தெரிவித்தார். இதுதொடர்பாக 1,021 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் குறிப்பிட்டார்.
"ஹெராயின், பிரவுன் சுகர், டன் பாங் உள்ளிட்ட போதைப் பொருள்களைப் பறிமுதல் செய்துள்ளோம். மேலும் சுமார் 51 ஹெக்டேர் நிலப்பரப்பில் பரவியிருந்த போதைப் பயிர்களை அழித்துள்ளோம்.போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு எதிரான போர் மேலும் தீவிரமடையும்," என்றார் விஜய்குமார்.

