விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் சிறிய கல்

விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் சிறிய கல்

1 mins read
a3d05366-19eb-4b1c-b0a2-70d9588502da
-

புதுடெல்லி: விமா­னத்­தில் வழங்­கப்­பட்ட உண­வில் சிறிய கல் தென்­பட்­டதை அடுத்து ஏர் இந்­தியா நிறு­வ­னம் மன்­னிப்பு கோரி­யது. அண்­மை­யில் டெல்­லி­யில் இருந்து நேப்­பா­ளத் தலை­ந­கர் காத்­மாண்­டுக்­குச் சென்ற பெண்­ம­ணிக்கு நடு­வா­னில் விமா­னம் பறந்து கொண்­டி­ருந்­த­போது உணவு வழங்­கப்­பட்­டது.

அதைச் சாப்­பி­டத் தொடங்கிய அந்­தப் பெண் பயணி, உண­வுக்­குள் சிறு கல் ஒன்று தென்­பட்டதைக் கண்டு அதிர்ச்­சி­யா­னார். உட­ன­டி­யாக அதைத் தனது கைப்­பே­சி­யில் அவர் படம் பிடித்­தார். பின்­னர் கடந்த 8ஆம் தேதி­யன்று இது­கு­றித்து அவர் டுவிட்­ட­ரில் பதி­விட்­டார். மேலும் புகைப்­ப­டத்­தை­யும் பகிர்ந்­தார்.

இது­கு­றித்து இணை­ய­வா­சி­கள் பல்­வேறு கருத்­து­க­ளைத் தெரி­வித்து வரும் நிலை­யில், அந்­தப் பெண் பய­ணிக்கு நேர்ந்த அனு­ப­வத்­துக்­காக வருந்­து­வ­தாக ஏர் இந்­தியா நிறு­வ­னம் தெரி­வித்­துள்­ளது.

"பயணிக்கு வழங்கப்பட்ட உணவில் கல் இருந்ததாகக் கூறப்படுவதை மிக தீவிரமான நிகழ்வாகக் கருதுகிறோம். இதற்காக மன்னிப்பு கோருகிறோம்" என அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.