ஒற்றுமை நடைப்பயணம் நிறைவு: 21 அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு

ஒற்றுமை நடைப்பயணம் நிறைவு: 21 அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு

1 mins read
98eea0bb-2200-483e-a766-44bfd8d3beae
படம்: எஎஃப்பி -

புது­டெல்லி: காங்­கி­ரஸ் முன்­னாள் தலை­வர் ராகுல் காந்தி மேற்­கொண்­டுள்ள ஒற்­றுமை நடைப்­ப­ய­ணத்­தின் நிறைவு விழா­வில் பங்­கேற்க வரு­மாறு நாடு முழு­வதும் உள்ள 21 முக்­கி­யக் கட்சி­க­ளுக்கு அழைப்பு விடுத்­துள்­ளார் காங்­கி­ரஸ் தேசி­யத் தலை­வர் மல்­லி­கார்­ஜுன கார்கே.

அடுத்த நாடா­ளு­மன்­றத் தேர்த­லுக்­கான கூட்­ட­ணிக்கு இந்த நிகழ்வைப் பயன்­ப­டுத்­திக் கொள்ள காங்­கி­ரஸ் கட்­சித் தலைமை திட்­ட­மிட்­டுள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

கடந்த செப்­டம்­பர் மாதத் தொடக்­கத்­தில் தமி­ழ­கத்­தின் கன்­னி­யா­கு­மரி பகு­தி­யில் இருந்து தனது நடைப்­ப­ய­ணத்தை தொடங்­கி­னார் ராகுல்.

பல்­வேறு மாநி­லங்­களில் நீடித்த இந்த நடைப்­ப­ய­ணத்­தின்­போது சுமார் 3,300 கிலோ மீட்­டர் தூரத்­தைக் கடந்­துள்ள நிலையில், எதிர்­வ­ரும் 30ஆம் தேதி காஷ்மீரில் இந்த நடைப்பயணத்தை முடிக்க உள்­ளார் ராகுல்.

இதை­ய­டுத்து, ஸ்ரீந­க­ரில் நடை­பெற உள்ள நிறைவு விழா­வில் பங்­கேற்க வரு­மாறு ஒரு­மித்த கருத்து கொண்­டுள்ள 21 அரசியல் கட்­சித் தலை­வர்­களுக்கு காங்­கி­ரஸ் தலை­வர் மல்­லி­கார்­ஜுன கார்கே கடி­தம் மூலம் அழைப்பு விடுத்­துள்­ளார்.

தற்­போது சிக்­க­லான தருணத்தில் முக்­கியப் பிரச்­சனை­களில் இருந்து நாட்டு மக்களின் கவ­னம் திசை திருப்­பப்­ப­டு­வ­தாக அந்­தக் கடி­தத்­தில் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

ராகுல் காந்­தி­யின் நடைப்­பயணம் வலி­மை­யான குர­லாக உருவெ­டுத்­துள்­ளது என்­றும் இறுதி நிகழ்­வில் பல்­வேறு தலை­வர்­கள் பங்­கேற்­பது அப்­ப­ய­ணத்­தின் நோக்­கத்­துக்கு வலுச்சேர்ப்­ப­தாக அமை­யும் என்­றும் மல்­லி­கார்­ஜுன கார்கே தெரி­வித்­துள்­ளார்.

சமூ­கத்­தின் அனைத்து தரப்­பி­ன­ரும் நடைப்ப­ய­ணத்­தில் பங்­கேற்­ற­தா­கக் குறிப்­பிட்­டுள்ள அவர், மக்­க­ளு­ட­னான நேரடி உரை­யா­டல்­தான் இந்­தப் பய­ணத்­தின் மிகப்­பெ­ரிய சாதனை என்று கூறி­யுள்­ளார்.