ரூ.164 கோடி: ஆம் ஆத்மி திருப்பிச் செலுத்த உத்தரவு

ரூ.164 கோடி: ஆம் ஆத்மி திருப்பிச் செலுத்த உத்தரவு

1 mins read
098fb805-5b3a-41e3-bed0-fdfad908d2bf
படம்: பிக்ஸாபே -

புதுடெல்லி: அர­சி­யல் விளம்­பரங்­க­ளுக்­காக அர­சுப் பணத்தை செல­விட்­ட­தாக ஆம் ஆத்மி கட்சி மீது புகார் எழுந்­துள்­ளது.

இதை­ய­டுத்து, விளம்­ப­ரத்­துக்­காக செல­விட்ட ரூ.164 கோடியை திருப்­பிச் செலுத்­து­மாறு டெல்லி தக­வல், விளம்­ப­ரத்­துறை இயக்­கு­ந­ர­கம் அக்­கட்­சிக்கு உத்­த­ர­விட்­டுள்­ளது.

இது தொடர்­பாக அனுப்­பி­யுள்ள நோட்­டீ­சில், அடுத்த பத்து நாள்­க­ளுக்­குள் இத்­தொ­கையை திருப்­பிச் செலுத்­தத் தவ­றி­னால் ஆம் ஆத்மி கட்­சி­யின் தலைமை அலு­வ­ல­கத்­துக்கு சீல் வைக்­கப்­படும் எனக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. ஆம் ஆத்மி கட்­சிக்­கும் டெல்லி துணை நிலை ஆளு­நர் வினய் குமார் சக்­சே­னா­வுக்­கும் இடையே கருத்து வேறு­பா­டு நிலவி வரு­கிறது.

இந்­நி­லை­யில், டெல்லி ஆம் ஆத்மி அரசு அர­சி­யல் விளம்­பரங்­க­ளுக்­காக, உச்ச நீதி­மன்ற வழி­காட்டி நெறி­மு­றை­களை மீறி, அர­சுப் பணத்­தைச் செல­விட்­ட­தாக ஆளு­நர் தெரி­வித்­தி­ருந்­தார்.

இதை­ய­டுத்து, விளம்­ப­ரங்­களுக்­காக செல­விட்ட ரூ.97 கோடியை ஆம் ஆத்மி கட்­சி­யி­டம் இருந்து வசூ­லிக்­கும்­படி டெல்லி தலை­மைச் செய­ல­ருக்கு உத்­த­ர­விட்­டி­ருந்­தார். எனி­னும், ஆம் ஆத்மி கட்சி அத்­தொ­கை­யைச் செலுத்­த­வில்லை.

இந்­நி­லை­யில், வட்­டி­யும் அச­லு­மாக ரூ.164 கோடியை அக்­கட்சி அர­சுக்குத் திருப்பிச் செலுத்த வேண்­டும் என டெல்லி அர­சின் தக­வல், விளம்­ப­ரத்­துறை இயக்­கு­ந­ர­கம் தெரி­வித்­துள்­ளது.

இந்நிலையில், ஆளுநரின் உத்தரவு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.