பெங்களூர்: கர்நாடகாவில் திறந்தவெளிக் காரில் நின்றபடி வந்த பிரதமர் மோடியை நோக்கி சிறுவன் ஒருவன் மாலை போட பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கர்நாடகா மாநிலம், ஹூப்ளி நகரில் ஐந்து நாள்களுக்கு நடைபெறும் இளைஞர் திருவிழா வைத் தொடங்கிவைப்பதற்காக பிரதமர் மோடி திறந்த காரில் நின்றபடி பயணம் செய்தார். அவருக்கு சாலையின் இருபுறத்திலும் திரண்டிருந்த மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது, மோடிக்கு வழங்கப் பட்ட பாதுகாப்பையும் மீறி பேரணி யின் நடுவில் திடீரென சிறுவன் ஒருவன் மாலையுடன் பிரதமர் மோடியை நோக்கி ஓடி வந்தான். சிறுவனைப் பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
பின்னர், சிறுவனிடம் இருந்த மாலையைப் பிரதமர் மோடி வாங்கிக்கொண்டார்.

