விபத்து: 10 பக்தர்கள் உயிரிழப்பு

விபத்து: 10 பக்தர்கள் உயிரிழப்பு

1 mins read
82bc1a8d-b8ec-4ef0-834b-73586b311e4e
-

நாசிக்: மகா­ராஷ்­டிரா மாநி­லத்­தில் உள்ள ஷீரடி சாய்­பாபாவை தரிசனம் செய்வதற்காக 50 பயணிகளுடன் சென்று கொண் டி­ருந்த பேருந்து ஒன்று, சரக்கு வாக­னத்­தின் மீது மோதி­ய­தில் ஏழு பெண்­கள் உட்­பட 10 பேர் உயி­ரி­ழந்­த­னர். 12 பேர் படு­கா­யம் அைடந்­த­னர்.

காய­ம­டைந்­த­வர்­கள் நாசிக்­கில் உள்ள மருத்­து­வ­ம­னை­களில் சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர். இந்­தப் பலி எண்­ணிக்கை மேலும் அதி­க­ரிக்­கக்­கூ­டும் என்று அஞ்­சப்­ப­டு­வ­தாக அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

இத­னி­டையே, உயி­ரி­ழந்­த­வர்­களின் குடும்­பத்­தி­ன­ருக்கு இரங்­கல் தெரி­வித்­துள்ள மஹா­ராஷ்­டிர முதல்­வர் ஏக்­நாத் ஷிண்டே, தலா ரூ.5 லட்­சம் நிவா­ர­ணம் அறி­வித்­துள்ளார்.

அத்துடன், இந்தச் சம்­ப­வம் குறித்து விசா­ரணை நடத்தவும் அதி­கா­ரி­க­ளுக்கு அவர் உத்­த­ர­விட்­டுள்­ளார்.