'கிரிப்டோ கரன்சிக்குத் தடை விதிக்கப்பட வேண்டும்'

2 mins read
0a8f967e-9158-4e52-9328-4b5edd6ba464
-

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த் தாஸ்: கிரிப்டோ கரன்சிக்கு அறவே மதிப்பு இல்லை

புது­டெல்லி: இந்­தி­யா­வில் கிரிப்­டோ­க­ரன்­சிக்கு முழு­மை­யாக தடை விதிக்க வேண்­டும் என மத்­திய ரிசர்வ் வங்கி ஆளு­நர் சக்­தி­காந்த் தாஸ் வலி­யு­றுத்தி உள்­ளார்.

கிரிப்­டோ­க­ரன்சி வர்த்­த­கம் சூதாட்­டம் போன்­றது என்­றும் பல்­வேறு குழப்­பங்­களை ஏற்­ப­டுத்­தும் என்­றும் அவர் கூறி­யுள்­ளார்.

"ஒவ்­வொரு சொத்­துக்­கும் குறிப்­பிட்ட மதிப்பு இருக்க வேண்­டும், ஆனால், கிரிப்­டோ­க­ரன்­சி­யைப் பொருத்­த­வரை எந்த மதிப்­பும் கிடை­யாது. இந்த நடை­முறை எந்த வகை­யி­லும் நிதி­யாக இருக்­காது. எனவே அதற்கு முழு­மை­யா­கத் தடை விதிக்க வேண்­டும்," என சக்­தி­காந்த் தாஸ் தெரி­வித்­துள்­ளார்.

கடந்த 2021ஆம் ஆண்டு இறு­தி­யில் கிரிட்ப்­டோ­க­ரன்­சி­யான பிட்­கா­யின் மதிப்பு ஆக அதி­க­மாக ரூ.47 லட்­சம் என்று கூறப்­பட்­டது. அதன் பின்­னர் அதன் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்­தித்து வரு­கிறது.

இந்­நி­லை­யில் இந்­திய ரிசர்வ் வங்கி ஆளு­நர் அதற்கு அறவே மதிப்பு இல்லை என்­கி­றார்.

"கிரிப்­டோ­க­ரன்­சி­யின் மதிப்பு அல்­லது விலை அதி­க­ரிப்­பது என்­பது நம்­பிக்­கையை மட்­டுமே அடிப்­ப­டை­யா­கக் கொண்­டது. மற்ற எந்த அடிப்­ப­டை­யும் இல்­லா­மல், ஒரு பொரு­ளின் விலை முழு­மை­யாக ஏற்­றம் காண்­ப­தும் இறங்­கு­வ­தும் சூதாட்­டத்­துக்கு நிக­ரா­னது.

"இந்­தி­யா­வில் சூதாட்­டத்தை அனு­ம­திக்­க­வில்லை. அவ்­வாறு அனு­ம­திக்க விரும்­பி­னால், கிரிப்­டோ­க­ரன்சி பரி­மாற்­றத்­தை­யும் சூதாட்­ட­மா­கக் கருதி, உரிய விதி­களை வகுக்க வேண்­டி­யி­ருக்­கும்," என்று சக்­தி­காந்த் தாஸ் தெரி­வித்­துள்­ளார்.

கிரிப்­டோ­க­ரன்சி என்­பது நிதி சார்ந்த விஷ­யம் அல்ல என்­றும் அதைச் சொத்­தா­கக் கரு­து­வ­தும் மிக­வும் தவ­றா­னது என்­றும் குறிப்­பிட்­டுள்ள அவர், கிரிப்­டோக்­களைச் சட்­டப்­பூர்­வ­மாக்­கு­வது சிக்­கலை ஏற்­ப­டுத்­தும் என்று கூறி­யுள்­ளார்.

தமது கருத்­து­கள் வெறும் எச்­ச­ரிக்­கையல்ல என்­றும் ஓராண்­டுக்கு முன்­பி­ருந்தே கிரிப்­டோ­க­ரன்­சி­யின் மதிப்பு விரை­வில் சரிந்­து­வி­டும் எனத் தொடர்ந்து அறி­வு­றுத்­தப்­பட்டு வந்­த­தா­க­வும் அவர் கூறி­யுள்­ளார்.

"கடந்த ஓராண்­டாக நடப்­ப­தைப் பார்த்­தால் எல்­லாம் தெளி­வா­கப் புரி­யும். மின்­னி­லக்­க­ம­ய­மாக்­க­லுக்­கும் கிரிப்­டோ­க­ரன்சி பயன்­பாட்­டுக்­கும் இடையே வித்­தி­யா­சம் உள்­ளது. மின்­னி­லக்­கப் பரி­வர்த்­த­னை­க­ளால் யாருக்­கும் பாதிப்­பு­கள் இல்லை. ஆனால், கிரிப்­டோ­க­ரன்சி விவ­கா­ரத்­தில் நாம் மிகுந்த எச்­ச­ரிக்­கை­யு­டன் இருக்க வேண்­டும்," என்று ரிசர்வ் வங்கி ஆளு­நர் சக்­தி­காந்த் தாஸ் தெரி­வித்­துள்­ளார்.