ஒடிசா: கோயில் நெரிசலில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு

ஒடிசா: கோயில் நெரிசலில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு

1 mins read
dca7dacd-a5a6-4e0f-8b34-cef68acb0f02
-

கட்­டாக்: ஒடி­சா­வின் கட்­டாக் மாவட்­டத்தின் பதம்மா என்னும் சிற்றூருக்கு அருகே மகா­ந­தி­யோ­ரம் சிங்­க­நா­தர் கோயில் அமைந்­துள்­ளது. இது ஒடி­சா­வின் புகழ்­பெற்ற ஆன்­மி­கத் தல­மா­கும். மகர சங்­க­ராந்­தியை முன்­னிட்டு அந்­தக் கோயி­லில் நேற்று முன்தினம் மகர மேளா தொடங்­கி­யது. இதில் சுமார் 200 ஆயி­ரத்­திற்­கும் மேற்­பட்ட பக்­தர்­கள் கலந்­து­கொண்­ட­னர். அப்­போது அங்­குள்ள பதம்பா - கோபி­நாத்­பூரை இணைக்­கும் பாலத்­தில் ஏற்பட்ட கூட்­ட­நெ­ரி­சலில் சிக்கி 45 வயதுப் பெண் உயி­ரி­ழந்­தார். குழந்­தை­கள், பெண்­கள் உட்­பட 25க்கும் மேற்­பட்டோர் படு­கா­யம் அடைந்­த­னர்.