போராட்டத்தில் சபரிமலை பக்தர்கள்

போராட்டத்தில் சபரிமலை பக்தர்கள்

1 mins read
5c258fa4-096a-4234-8e61-55a7c7e3ae8b
போக்­கு­வரத்து நெரி­ச­லைத் தவிர்ப்­ப­தற்­காக சனிக்­கி­ழமை முதல் எரு­மே­லி­யில் இருந்து பக்­தர்­கள் வாக­னங்­களில் சப­ரி­ம­லைக்­குச் செல்ல காவல் துறை தடை விதித்­தது. படம்: த இந்து -

திரு­வ­னந்­த­பு­ரம்: மக­ர­ஜோதி தரி­ச­னத்தைக் காண சப­ரி­மலைப் பகு­தி­யில் நேற்று முன்­தி­னம் ஏரா­ள­மான பக்­தர்­கள் குவிந்­த­னர்.

இதற்­கி­டையே, போக்­கு­வரத்து நெரி­ச­லைத் தவிர்ப்­ப­தற்­காக சனிக்­கி­ழமை முதல் எரு­மே­லி­யில் இருந்து பக்­தர்­கள் வாக­னங்­களில் சப­ரி­ம­லைக்­குச் செல்ல காவல் துறை தடை விதித்­தது. இத­னால் பாதித் தூரம் வந்த தமி­ழக, கர்­நா­டக மாநி­லத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்­பட்ட ஐயப்ப பக்­தர்­கள் தடுத்து நிறுத்­தப்­பட்­ட­னர்.

இதற்கு எதிர்ப்பு தெரி­வித்த பக்தர்கள் அங்கு திடீ­ரென போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர். இதை­ய­டுத்து, காவல்­துறை அதி­கா­ரி­கள் பேச்­சு­வார்த்தை நடத்­தி­னர். போக்குவரத்து நெரி­சல் குறைந்த பிறகு அனை­வ­ரை­யும் அனுப்பி வைப்­ப­தாக அவர் உறு­தி­ய­ளித்­ததைத் தொடர்ந்து பக்­தர்­கள் போராட்­டத்தைக் கைவிட்­ட­னர்.