சிறுபான்மையினரின் பங்களிப்பைக் குடியுரிமை திருத்தச் சட்டம் குறைக்கும்

சிறுபான்மையினரின் பங்களிப்பைக் குடியுரிமை திருத்தச் சட்டம் குறைக்கும்

2 mins read
d84eb756-dc0d-4c6a-8180-1eabfccc5f4b
புது­டெல்லி: குடி­யு­ரிமை திருத்­தச் சட்­டத்தை (சிஏஏ) அமல்­ப­டுத்­து­வதால் நாட்­டில் சிறு­பான்­மை­யி­ன­ரின் பங்­க­ளிப்­பைக் குறைக்க வாய்ப்­புள்­ள­தா­கப் பொரு­ளி­யல் நிபு­ண­ரும் நோபல் பரிசு பெற்­ற­வரு­மான அமா்த்­தியா சென் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளார். படம்: சாவ்பாவ் -

பொருளியல் நிபுணரும் நோபல் பரிசு பெற்றவருமான அமா்த்தியா சென் அதிருப்தி

புது­டெல்லி: குடி­யு­ரிமை திருத்­தச் சட்­டத்தை (சிஏஏ) அமல்­ப­டுத்­து­வதால் நாட்­டில் சிறு­பான்­மை­யி­ன­ரின் பங்­க­ளிப்­பைக் குறைக்க வாய்ப்­புள்­ள­தா­கப் பொரு­ளி­யல் நிபு­ண­ரும் நோபல் பரிசு பெற்­ற­வரு­மான அமா்த்­தியா சென் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளார்.

குடி­யு­ரிமை திருத்­தச் சட்­டத்தை மத்­திய அரசு கடந்த 2019ஆம் ஆண்­டில் நிறை­வேற்­றி­யது. அதன்­படி, பங்ளாதேஷ், பாகிஸ்­தான், ஆப்­கா­னிஸ்­தான் ஆகிய நாடு­களில் மதத் துன்­புறுத்­த­லுக்கு உள்­ளாகி இந்­தி­யா­வுக்­குக் குடி­பெ­யா்ந்த இந்­து­க்கள், சீக்­கி­யா்­கள், கிறிஸ்துவர்­கள், பௌத்த மதத்­தினா், சம­ணா்­கள், பாா்சிக்­கள் ஆகி­யோ­ருக்­குக் குடி­யு­ரிமை வழங்க வழி­வகை செய்­யப்­பட்­டது. மேற்­கண்ட நாடு­கள் அனைத்­தும் முஸ்­லிம் சமூ­கத்­தி­ன­ரைப் பெரும்­பான்­மை­யி­ன­ரா­கக் கொண்­ட­தால் அவா்க­ளுக்­குக் குடி­யு­ரிமை வழங்­கப்­ப­ட­வில்லை என மத்­திய அரசு விளக்­க­ம­ளித்­தது.

இது தொடா்பாக பொரு­ளியல் நிபுணா் அமா்த்­தியா சென் கூறு­கை­யில், "மதச்­சாா்பற்ற, சமத்­து­வக் கொள்­கை­களை மதிக்­கும் இந்­தியா போன்ற நாடு, குடி­யு­ரிமை திருத்­தச் சட்­டத்­தின் வாயி­லாக பார­பட்­ச­மான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வது அதி­ருப்தி அளிக்­கிறது.

பங்ளாதேஷ், மேற்கு வங்­கம் என எந்­தப் பகு­தி­யைச் சோ்ந்த சிறு­பான்­மை­யி­ன­ரை­யும் பூா்வகுடி மக்­க­ளாக அறி­விக்க வேண்­டுமே தவிர வெளி­நாட்­ட­வா்­க­ளாக வகைப்­ப­டுத்­தக் கூடாது. மத்­திய அர­சின் இந்­ந­ட­வ­டிக்கை அா்த்த­மற்­றது மட்­டு­மின்றி அடிப்­ப­டை­யில் தவ­றா­ன­தும்கூட. நாட்­டின் ஒற்­று­மைக்­காக மகாத்மா காந்தி போன்ற தலை­வர்­கள் பாடுபட்டனர். ஆனால், இப்­போது குடி­யு­ரிமை திருத்­தச் சட்­டம் என்ற பெய­ரில் நாட்­டில் சிறு­பான்­மை­யி­ன­ரின் பங்­க­ளிப்­பைக் குறைக்க மத்திய அரசு முயற்சி செய்து வரு­கிறது என்று அமர்த்­தியா சென் கூறி­யுள்­ளார். நேர­டி­யா­கவோ அல்­லது மறை­மு­க­மா­கவோ சிறு­பான்­மை­யி­ன­ரின் முக்­கி­யத்­து­வத்தை இந்­தச் சட்­டம் குறைத்­துள்­ளது.

2023 மக்­க­ள­வைத் தோ்தலில் வட்­டா­ரக் கட்­சி­கள் முக்­கி­யத்­து­வம் பெறு­கின்­றன. திமுக, திரிணா­மூல், சமாஜ்­வாடி ஆகிய கட்­சி­கள் முக்­கி­யப் பங்கு வகிக்­கும். தோ்தலில் பாஜ­க­வுக்கு ஆத­ர­வாக அலை வீசும் என எதிா்பாா்ப்­பது தவ­றா­னது. இந்­துக்­க­ளுக்கு மட்­டுமே ஆத­ர­வான கட்­சி­யாக பாஜக செயல்­பட்டு வரு­கிறது.

இந்­தி­யா­வுக்­கான சமத்துவக் கொள்­கையை பாஜக மதிப்­ப­தில்லை. இந்­துக்­களும், இந்தி பேசு­ப­வா்­களும் மட்­டுமே இந்­தி­யா்­கள் என பாஜக தவ­றா­கப் புரிந்து­கொண்­டுள்­ளது.

அடுத்த பிர­த­ம­ரா­கும் திறமை மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜிக்கு உள்­ளது. எனி­னும் அவா் பாஜ­க­வுக்கு எதி­ராக அனைத்து கட்­சி­க­ளை­யும் ஒருங்­கி­ணைப்­பாரா என்­ப­தைப் பொறுத்­தி­ருந்­து­தான் பாா்க்க வேண்­டும்.

காங்­கி­ரஸ் கட்சி தற்­போது வலிமை குறைந்­தி­ருந்­தா­லும், அக்­கட்­சியே இந்­தி­யா­வுக்­கான கொள்­கையை வழங்­கும் திறன் கொண்­டது. மற்ற கட்­சி­க­ளால் அதை வழங்க முடி­வ­தில்லை. ஆனால், காங்­கி­ரஸ் கட்­சிக்­குள்­ளேயே பிரிவினைகள் காணப்­ப­டு­வது பெரும் பாதிப்பை ஏற்­ப­டுத்­தக் கூடும்," என்றாா்.